ஊரின்னிசை
From Tamil Wiki
To read the article in English: Oorinnisai.
ஊரின்னிசை (ஊர் இன்னிசை) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் ஊரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது இன்னிசை வெண்பாக்களால் பாடுவது ஊரின்னிசை[1][2].
அடிக்குறிப்புகள்
- ↑
இறைவன் பெயர் ஊரினை இன்னிசையான்
முறையின் தொண்ணூறு எழுபான் ஐம்பான்
அறையின் அப்பெயர் ஆகும் என்ப- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 825
- ↑
பாட்டுடைத் தலைவன் ஊரைச் சார
இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ
தேனும் எழுபா னேனும் ஐம்பஃ
தேனும் இயல்புவது ஊர்இன் னிசையே- முத்துவீரியம் - யாப்பிலக்கணம் 132
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
வெளி இணைப்புகள்
✅Finalised Page