under review

உறையூர் முதுகூத்தனார்

From Tamil Wiki
Revision as of 14:29, 10 September 2022 by Ramya (talk | contribs) (Created page with "உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முதுக்கூற்றனார்) சங்க காலப் புலவர். இவர் பாடிய ஒன்பது பாடல்கள் சங்க இலக்கியத்தொகையில் உள்ளன. == வாழ்க்கைக் குறிப்பு == உறையூர் முதுகூத்தனார், உறைய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முதுக்கூற்றனார்) சங்க காலப் புலவர். இவர் பாடிய ஒன்பது பாடல்கள் சங்க இலக்கியத்தொகையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

உறையூர் முதுகூத்தனார், உறையூர் முதுக்கூற்றனார் என்றும் அழைக்கப்பட்டார். உறையூரைச் சேர்ந்தவர். உறையூர் முதுகூத்தனார் 9 சங்கப் பாடல்களை இயற்றியுள்ளார். இதில் குறுந்தொகையில், 2ம்,

இலக்கிய வாழ்க்கை

உறையூர் முதுகூத்தனார் பாடிய ஒன்பது பாடல்கள் அகநானூறு, புறநானூறு, திருவள்ளுவமாலை(39) சங்க இலக்கியத்தொகையில் உள்ளன.

பாடல் வழி அறியவ்ரும் செய்திகள்

வள்ளுவர், குறள்

“தெய்வீக வள்ளுவரின் குறளை படிக்காதவர்கள் நல்ல செயல்களுக்குத் தகுதியற்றவர்கள்: மொழியில் இனிமையானதை அவர்கள் வெளிப்படுத்தியதில்லை அல்லது அவர்களின் மனதில் விழுமியமானவை என்னவென்று புரியவில்லை."

  • சோழர் காவிரியாற்றின் இரு மருங்கிலும் உள்ள உறையூர், திருவரங்கம் ஆகிய இரு ஊர்களிலும் பங்குனி முயக்கம் என்னும் விழா கொண்டாடி முடிந்த மறுநாள் கொண்டாடப்பட்ட இடம் வெறிச்சோடிக் கிடப்பது போல தலைவியின் நெற்றி வெறிச்சோடிக் கிடந்தது. (அகம் 137)

பாண்டியன் பொதியமலை மூங்கில் போல் இருந்த தோள் வாடிப்போயிற்று.

  • உப்பு கொண்டு செல்லும் உமணர்கள் (அகம் 329)
  • முல்லைப்பூ பூத்துக் கிடக்கிறது. பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் கூழை வாங்கிக்கொண்டு பசு மேய்க்கச் செல்லும் இடையன் கூட முல்லை மொட்டுகளை அணிந்திருக்கிறான். அவர் இன்னும் வராமையால் என்னால் முல்லைப் பூவை அணிய முடியவில்லையே எனத் தலைவி வருந்துகிறாள். (குறுந்தொகை 221)
  • அவன் அருவி நீர் பாய்ச்சி ஐவன நெல் விளைவித்துக்கொண்டிருக்கிறான். அவனை அணைக்காமையால் என் கையில் வளையல் நிற்கவில்லை. உடல் பசலை ஆர்க்கின்றது. (குறுந்தொகை 371)
  • பொழுதும் போனபின் வழிப்பறி மக்களும் வேலேந்திக்கொண்டு தண்ணுமை முழக்கத்துடன் வருகின்றனர். (குறுந்தொகை 390)
  • சிறுவர் முழக்கும் பறையில் எழுதப்பட்டுள்ள குருவி அடி படுவது போல அந்தக் குதிரைகளை அடித்து விரைந்து வரச் சொல்லும் தலைவி.
  • வீரை வெளிமான் முரசத்தில் மாலையில் விளக்கேற்றி வைக்கப்பட்டது.
  • உவமை: இடையன் தீ மூட்டும் ஞெலிகோல் போன்று ஒளி தர வல்லவன்; இருப்பது சிறிதே ஆயினும் வந்தவர்க்கு ஊட்டும் மகளிர் போல வழங்கவும் வல்லவன்; அரசன் வழங்கும் பெருஞ்சோறு போலப் பகைவர்களை வெட்டித் தூவவும் வல்லவன்.

பாடல்

  • அகநானூறு 137
  • அகநானூறு 329
  • குறுந்தொகை 221
  • நற்றிணை 353
  • நற்றிணை 371
  • நற்றிணை 390
  • நற்றிணை 28
  • ந ற்றிணை58
  • புறநானூறு 331

பாடல் நடை

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.