இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2008
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-2008
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | யாத்தி | மீனாமுத்து | யுகமாயினி |
பிப்ரவரி | யாசகம் | களந்தை பீர்முகம்மது | தீராநதி |
மார்ச் | கூடு திரும்புதல் | பாரதி பாலன் | கல்கி |
ஏப்ரல் | லாவண்யா Vs வைகுந்தன் | மாதுமை | யுகமாயினி |
மே | இயந்திரங்கள் | இமையம் | தீராநதி |
ஜூன் | தாவரங்களின் தலைவன் | எஸ். சங்கரநாராயணன் | யுகமாயினி |
ஜூலை | சொந்தங்கள் வேண்டும் | பாலா விஸ்வநாதன் | கலைமகள் |
ஆகஸ்ட் | விசிறி வீடு | தஞ்சாவூர்க் கவிராயர் | கல்கி |
செப்டம்பர் | இரண்டு மரங்கள் | பாவண்ணன் | தீராநதி |
அக்டோபர் | பாசம் ஒரு பாவ நதி | லா.ரா. சப்தரிஷி | அமுதசுரபி |
நவம்பர் | சுருதி பேதம் | ஜி. கோமளா | ஆனந்த விகடன் |
டிசம்பர் | புதிய அவதாரம் | ஜெயந்தி சங்கர் | கல்கி |
2008 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை
2008 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, களந்தை பீர்முகம்மது எழுதிய ‘யாசகம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. சாருகேசி இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை அறந்தாங்கி சங்கர் தேர்வு செய்தார்.
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.