being created

இலக்கியச் சிந்தனை

From Tamil Wiki
Revision as of 15:52, 21 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பு : 1970-2019
இலக்கியச் சிந்தனை பரிசுபெற்ற சிறந்த சிறுகதைகள் - 1997

இலக்கியச் சிந்தனை அமைப்பு 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஈடுபாடுள்ள ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இதனைத் தொடங்கினர் தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டு வருகிறது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

நோக்கம்

பிப்ரவரி 28, 1970-ல், சென்னையில் இலக்கியச் சிந்தனை அமைப்பு தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து இவ்வமைப்பைத் தொடங்கினர்.  வாசகர்களிடையே சிறந்த இலக்கியப் படைப்புகளைப் பற்றிய கவனம் ஏற்படுத்துவதும், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதுமே இலக்கியச் சிந்தனை அமைப்பின் முக்கிய நோக்கம்.

செயல்பாடுகள்

மாதந்தோறும் இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளிலிருந்து சிறந்த ஒன்று, இலக்கியவாதி ஒருவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சிறுகதைகளில் சிறந்த சிறுகதை ஒன்று, ஆண்டின் சிறந்த சிறுகதையாக அறிவிக்கப்பட்டு அதனை எழுதிய எழுத்தாளர், அவ்வாண்டின் இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெறுகிறார். அச்சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு நாளன்று நடைபெறும் விழாவில் நூலாக வெளியிடப்படுகிறது.

முதல் நான்கு தொகுப்புகளை இலக்கியச் சிந்தனை அமைப்பே நூல்களாக வெளியிட்டது. ஐந்தாம் ஆண்டிலிருந்து வானதி பதிப்பகம் மூலம் இந்நூல்கள் வெளியாகின்றன.

இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற எழுத்தாளர்கள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.