இருக்கம் ஆதிமூல முதலியார்
இருக்கம் ஆதிமூல முதலியார் (பிறப்பு : ஏப்ரல் 4, 1866 (பங்குனி 28) ), 'சிவனடியார்த் திருக்கூட்டம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர். ‘சைவம்’ என்ற இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார்.
பிறப்பு, கல்வி
இருக்கம் ஆதிமூல முதலியார், சென்னை ராயப்பேட்டையில், ஏப்ரல் 4, 1866-ல், (பங்குனி 28) கனகசபை முதலியார் - சொக்கம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தெலுங்குப் பாடசாலையில் கல்வி பயின்றார். தந்தையிடமிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆசிரியர் வகுப்புக்கு வராத நாளில் தாமே மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் அளவுக்குத் தேர்ந்தவரானார்.
தனிவாழ்க்கை
கல்வியை முடித்தவுடன் பொது நலப் பணிகளில் ஆர்வம் கொண்டார். சமூகப் பணிகளிலும் ஆலயtஹ் தொண்டுகளிலும் ஈடுபட்டார். திருவொற்றியூர் ஆலயத்தில் நண்பர்களுடன் இணைந்து உழவாரப் பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
மயிலையில் நடைபெற்ற அறுபத்து மூவர் விழாவில் சான்றோர் பேரவையைக் கூட்டித் தமிழ்ச் சொற்பொழிவுகளை நடத்தி வருவதைத் தனது வழக்கமாக வைத்திருந்தார் இருக்கம் ஆதிமூல முதலியார். தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று சைவச் சொற்பொழிகளை நிகழ்த்தினார்.
சிவனடியார்த் திருக்கூட்டம்
சைவம் மாத இதழ்
சமய, இலக்கியப் பணிகள்
மறைவு
வரலாற்று இடம்
உசாத்துணை