இந்திரா பார்த்தசாரதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:
[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]
[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]


இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின  முன்னோடிகளில் ஒருவர்.  ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு  நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர்.  
இ. பா என வாசகர்களால் அழைக்கப்படுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின  முன்னோடிகளில் ஒருவர்.  ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு  நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர்.  


இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.
Line 27: Line 27:


=== நாவல்கள் ===
=== நாவல்கள் ===
இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும்.  
இவருடைய முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும்.  


இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை.  
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை.  
Line 38: Line 38:
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.


டில்லி பல்கழைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கழைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கழைக்கழகத்தில் நாடகத்துறையை உருவாக்கியதில் முதன்மையானவர்.
டில்லி பல்கழைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கழைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கழைக்கழகத்தில் நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.


ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.
Line 102: Line 102:


== விருதுகள் ==
== விருதுகள் ==
சாகித்ய அகாடமி விருது


சரஸ்வதி சம்மான் விருது
# சாகித்ய அகாடமி விருது
 
# சரஸ்வதி சம்மான் விருது
சங்கீத் நாடக அகாடமி விருது
# சங்கீத் நாடக அகாடமி விருது
 
# பாரதிய பாஷா பரிஷத்
பாரதிய பாஷா பரிஷத்
# பத்மஸ்ரீ விருது  
 
# தி இந்து லிட் ஃபார் லைஃப்- வாழ்நாள் சாதனையாளர் விருது  
பத்மஸ்ரீ விருது  
# சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்
 
தி இந்து லிட் ஃபார் லைஃப்- வாழ்நாள் சாதனையாளர் விருது  
 
சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்




Line 126: Line 121:


https://indiraparthasarathy.wordpress.com/category/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/
https://indiraparthasarathy.wordpress.com/category/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/
https://www.vikatan.com/news/literature/147971-interview-with-tamil-writer-indira-parthasarathy
__FORCETOC__
__FORCETOC__

Revision as of 22:34, 23 January 2022

இந்திரா பார்த்தசாரதி.jpg

இ. பா என வாசகர்களால் அழைக்கப்படுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர்.

இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.

வாழ்க்கை குறிப்பு

பிறப்பு,இளமை

இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது.

தனி வாழ்க்கை

திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

குடும்பம்

தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.

இலக்கிய பங்களிப்பு

சிறுகதைகள்

தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.

முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.

``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.

நாவல்கள்

இவருடைய முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும்.

இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை.

கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும்.

நாடகங்கள்

நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.

மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

டில்லி பல்கழைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கழைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கழைக்கழகத்தில் நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.

ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.

விவாதங்கள்

படைப்புகள்

சிறுகதைகள்

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.

நாவல்கள்

  1. ஆகாசத் தாமரை
  2. மாயமான் வேட்டை
  3. தந்திர பூமி
  4. திரைகளுக்கு அப்பால்
  5. சத்திய சோதனை
  6. குருதிப்புனல்
  7. கிருஷ்ணா கிருஷ்ணா
  8. வேதபுரத்து வியாபாரிகள்
  9. சுதந்திர பூமி
  10. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
  11. காலவெள்ளம்
  12. வேர்ப்பற்று
  13. வெந்து தணிந்த காடுகள்
  14. அக்னி
  15. தீவுகள்
  16. ஏசுவின் தோழர்கள்
  17. உச்சி வெயில்

நாடகங்கள்

  1. மழை
  2. போர்வை போர்த்திய உடல்கள்
  3. கால யந்திரங்கள்
  4. நந்தன் கதை
  5. கொங்கைத் தீ
  6. ஔரங்கசீப்
  7. ராமாநுஜர்
  8. இறுதி ஆட்டம்
  9. சூறாவளி
  10. பசி
  11. கோயில்
  12. தர்மம்
  13. நட்டக்கல்
  14. புனரபி ஜனனம், புனரபி மரணம்
  15. வீடு

கட்டுரைகள்

மொழிபெயர்ப்புகள்

இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாக்கம்.

மொழிபெயர்க்கப்பட்டவை

இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால்.

பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

  1. கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.
  2. குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு
  3. திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லக்சுமி கண்ணன்

விருதுகள்

  1. சாகித்ய அகாடமி விருது
  2. சரஸ்வதி சம்மான் விருது
  3. சங்கீத் நாடக அகாடமி விருது
  4. பாரதிய பாஷா பரிஷத்
  5. பத்மஸ்ரீ விருது
  6. தி இந்து லிட் ஃபார் லைஃப்- வாழ்நாள் சாதனையாளர் விருது
  7. சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்


உசாத்துணை

https://www.hindutamil.in/news/blogs/226898-10.html

https://www.vikatan.com/arts/literature/131740-life-history-of-tamil-writer-indira-parthasarathy-the-story-of-storytellers-part-32

https://indiraparthasarathy.wordpress.com/category/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/

https://www.vikatan.com/news/literature/147971-interview-with-tamil-writer-indira-parthasarathy