இணைமணி மாலை
From Tamil Wiki
Revision as of 20:57, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "'''இணைமணிமாலை''' என்பது, பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று ஆகும். இவ்வகைச் சிற்றிலக்கியத்தின் இலக்கணம் தொடர்பில் பாட்டியல் நூல்கள் தமக்குள் வேறுபடுகின்...")
இணைமணிமாலை என்பது, பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று ஆகும். இவ்வகைச் சிற்றிலக்கியத்தின் இலக்கணம் தொடர்பில் பாட்டியல் நூல்கள் தமக்குள் வேறுபடுகின்றன. சில நூல்கள் வெண்பாவும் அகவலும் மாறிமாறி வர அந்தாதியாக அமையும் நூறு பாடல்கள் கொண்டதே இணைமணிமாலை என்று கூற[1], இலக்கண விளக்கம் என்னும் நூல் "வெண்பாவும் அகவலும் வெண்பாவும் கலித்துறையுமாக இரண்டிரண்டாக இணைத்து வெண்பா அகவல் இணைமணிமாலை, வெண்பாக் கலித்துறை இணைமணிமாலை என நூறுநூறு அந்தாதித் தொடையாக வரப்படுவது இணைமணிமாலை என்கிறது[2].
குறிப்புகள்
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் Template:Webarchive
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.