under review

ஆத்மாநாம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(27 intermediate revisions by 9 users not shown)
Line 1: Line 1:
[[File:ஆத்மாநாம்.JPG|thumb|jeyamohan.in]] ஆத்மாநாம் [ஜனவரி 18, 1951 - ஜூலை 06, 1984] கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர். 'ழ' என்ற கவிதை ஏட்டின் ஆசிரியர்.
{{Read English|Name of target article=Atmanam|Title of target article=Atmanam}}
 
[[File:ஆத்மாநாம்.JPG|thumb|jeyamohan.in]]
 
[[File: ஆத்மாநாம்_படைப்புகள்.JPG |thumb| ஆத்மாநாம் படைப்புகள் நன்றி panuval.com]]
 
[[File:Atmanam.webp|thumb|ஆத்மாநாம்]]
== பிறப்பு மற்றும் கல்வி ==
[[File:Stellacover-659x1023.webp|thumb|என் நண்பர் ஆத்மாநாம்]]
சென்னையில் ஜனவரி 18, 1951-ல் பிறந்தவர். இயற்பெயர் எஸ்.கே.மதுசூதன். 34 வயதுகூட முடியாமல் இளம் வயதிலேயே ஜூலை 06, 1984-ல் பெங்களூரில் இறந்துபோனார். அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பிகாம்) பயின்றார்.
[[File:Atmanam (1).jpg|thumb|ஆத்மாநாம் (காகிதத்தில் ஒரு கோடு நூலின் பின்னட்டை ஓவியம். ஆதிமூலம்)]]
 
ஆத்மாநாம் (ஜனவரி 18, 1951 - ஜூலை 06, 1984)] கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர். 'ழ' என்ற கவிதை ஏட்டின் ஆசிரியர். தமிழ் நவீனக் கவிதைகளில் முதன்மை ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
== பிறப்பு, கல்வி ==
ஆத்மாநாம் சென்னையில் ஜனவரி 18, 1951-ல் பிறந்தார். இயற்பெயர் எஸ்.கே.மதுசூதன். அம்பத்தூரில் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பெற்று பிறகு வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்றார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பட்டப்படிப்பை (B. Com) அதே கல்லூரியில் மாலை வகுப்புகளில் சேர்ந்து படித்தார்.   அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பிகாம்) பயின்றார்.
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். சதர்ன் சுவிட்ச் கியர்ஸ், கோரமண்டல் கார்மென்ட்ஸ், ரெங்கா அப்பாரெல்ஸ் ஆகிய கம்பெனிகளில் வேலைசெய்தார். டாப் டென் (1978) என்ற ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனத்தைப் பெருங்கனவுகளுடன் தொடங்கினார்.
ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். 1967--ம் ஆண்டு சதர்ன் சுவிட்ச்கியர்ஸ் என்ற கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். 1968--ம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு கணக்காயர் அலுவலகத்தில் பயிற்சிக்கு சேர்ந்தார்.  கோரமண்டல் கார்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாரற்றிய பின் 1971- ல் ஆயத்த உடைகள் தயாரிக்கும் நிறுவனமான ரெங்கா அப்பாரெல்ஸ்க்கு மாறினார். 1978--ம் ஆண்டு அய்யப்பன் என்பவருடன் சேர்ந்து டாப்டென் என்ற ஆயத்த உடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை உருவாக்கினார்.  


Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு 1979-ல் புரசைவாக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு இன்டர் கிராப்ட் என்ற கம்பெனியில் பணிபுரிந்தார். ஆத்மாநாம், Lithium, Hyportrym, Largatyl, Fenargon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. 1983--ம் ஆண்டு தனக்கு சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துகளையே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். காப்பாற்றப்பட்டார். 1983--ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் Affective Disorderன் இரண்டாவது தாக்குதல் ஆத்மாநாமுக்கு ஏற்பட்டது. 1984 ஜனவரி இறுதிவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984--ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் அவர் பெங்களூரில் அவரது சகோதரர் ரகுநந்தனின் வீட்டில் இருந்தார். மார்ச் 9-ம் தேதி (1984) தனக்குத் தரப்பட்ட மருந்துகளை உட்கொண்டு இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் National Institute of Mental Health and Neurological Sciences மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984--ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதியிலிருந்து 20 வரை NIMHANSல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  ஏறத்தாழ ‘உயிரற்ற மனித உடம்பாக’ ஆத்மாநாம் வீடு திரும்பியதாக அவரது சகோதரர் ரகுநந்தன் குறிப்பிட்டார் (பிரம்மராஜன் எழுதிய குறிப்புகள்). 
== இதழியல் ==
நவீனக் கவிதைக்காக, 'ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டு வந்தார்.ழ' கவிதை இதழின் ஆசிரியராக இருந்தபோதே அவர் '2083 ஒரு அகால ஏடு' என்ற, ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்ட ஒரு இதழைத் துவக்கினார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
நவீனக் கவிதைக்காக, ‘ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டு வந்தார். ஆத்மாநாம் கவிதைகள் மட்டுமின்றி இசை, ஓவியம் போன்ற பல்துறை சார்ந்த கலைஞர்களோடும் நட்பில் இருந்தார்.
====== மொழியாக்கம் ======
 
பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதி வைத்திருந்தார் ஆத்மாநாம். 'எல்சால்வாடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையை மொழி பெயர்த்துள்ளார். பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைத் தேர்வொன்றிற்கு அவர் திட்டம் வைத்திருந்தார். ஆனால் அதில் ஒரு கவிதையை மாத்திரமே மொழிபெயர்த்து முடித்திருந்தார். அந்தோனின் பார்த்துஸெக் என்ற கிழக்கு ஐரோப்பியக் கவிஞரின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை செய்திருந்தார்.
பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதி வைத்திருந்தார் ஆத்மாநாம்.
====== நூல்மதிப்புரைகள் ======
 
புத்தக விமர்சனங்களை எழுதுவதிலும், பொறுப்பும் ஈடுபாடும் ஆத்மாநாமுக்கு இருந்தது. விமலாதித்த மாமல்லனின் சிறுகதைத் தொகுப்பிற்கும், ஆனந்தின் 'இரண்டு சிகரங்களுக்கு இடையே' என்ற குறுநாவலுக்கும் அவர் எழுதிய மதிப்புரைகள் [[மீட்சி]] இதழில் வந்தன.  
‘எல்சால்வாடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையை மொழி பெயர்த்துள்ளார்.
====== கவிதைகள் ======
 
ஆத்மாநாம் எழுதியவையாக 156 கவிதைகள் கிடைத்துள்ளன. ஆத்மாநாம் 1981-ல் 'காகிதத்தில் ஒரு கோடு' என்னும் தலைப்பில் தன் 37 கவிதைகளை ழ வெளியீடாக கொண்டுவந்தார். 1989 -ம் ஆண்டு  [[பிரம்மராஜன்]] (தன்யா-பிரம்மா வெளியீடாக)  ஆத்மாநாம் கவிதைகள் என்னும் தலைப்பில் எஞ்சிய கவிதைகளை தொகுத்து ஒரு முழுத்தொகுப்பை வெளியிட்டார். பின்னர் 2002-ல் காலச்சுவடு வெளியீடாக ஆத்மாநாம் எழுதிய 156 கவிதைகள் ஒரு தொகுப்பாக வெளிவந்தன. ஆத்மாநாம் கவிதைகளை தொகுத்து வெளியிட்டும், ஆத்மாநாம் பற்றிய மதிப்பீடுகளை உருவாக்கியும் தமிழ்ச்சூழலில் ஆத்மாநாமை நிலைநிறுத்தியவர் அவருடைய நண்பரான கவிஞர் [[பிரம்மராஜன்]].  
புத்தக விமர்சனங்களை எழுதுவதிலும், பொறுப்பும் ஈடுபாடும் ஆத்மாநாமுக்கு இருந்தது. விமலாதித்த மாமல்லனின் சிறுகதைத் தொகுப்பிற்கும், ஆனந்தின் 'இரண்டு சிகரங்களுக்கு இடையே' என்ற குறுநாவலுக்கும் அவர் எழுதிய மதிப்புரைகள் மீட்சி இதழில் (மாத இதழாக வெளிவந்த சமயத்தில்) வந்தன. 'ழ' கவிதை இதழின் ஆசிரியராக இருந்தபோதே அவர் '2083 ஒரு அகால ஏடு' என்ற, ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்ட ஒரு இதழைத் துவக்கினார்.  
 
அவர் செய்ய நினைத்துத் தொடங்கிய வேறுசில ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதை மொழிபெயர்ப்புகளையும் முடிக்காமலே விட்டுவிட்டார். குறிப்பாக அவருக்குப் பிடித்த அரசியல் நிலைப்பாடு கொண்ட பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைத் தேர்வொன்றிற்கு அவர் திட்டம் வைத்திருந்தார். ஆனால் அதில் ஒரு கவிதையை மாத்திரமே மொழிபெயர்த்து முடித்திருந்தார். அந்தோனின் பார்த்துஸெக் என்ற கிழக்கு ஐரோப்பியக் கவிஞரின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை செய்திருந்தார்.
 
இன்றுவரை ஆத்மாநாம் எழுதியவையாக, நமக்கு 156 கவிதைகள் கிடைத்துள்ளன. இவற்றைத் தொகுப்பாக்கித் தமிழ் வாசகர்களிடம் ஆத்மாநாமை நிலைநிறுத்தியதில் கவிஞர் பிரம்மராஜனுக்குத் தலையாய பங்குண்டு.
 
== விருதுகள் ==
== கவிஞர் ஆத்மாநாம் விருது ==
== கவிஞர் ஆத்மாநாம் விருது ==
கவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும் மெய்ப்பொருள் பதிப்பகம் ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.
கவிஞர் ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையில் மெய்ப்பொருள் பதிப்பகம் 'கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015--ம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.
 
==மறைவு==
==மறைவு==
 
ஆத்மாநாம், அஃபெக்ட்டிவ் டிஸார்டர் என்ற மனமுறிவு நோய்க்குள்ளாகி, 1979 முதல் மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தார் என்று அவர் நண்பர் [[ஸ்டெல்லா புரூஸ்]] சொல்கிறார்.  ஆத்மாநாம் நோய் முதிர்ந்து  ஜூலை 06, 1984-ல் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
அகச்சிக்கலாலும் புறநெருக்கடிகளாலும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட ஆத்மாநாம், அஃபெக்ட்டிவ் டிஸார்டர் என்ற மனமுறிவு நோய்க்குள்ளாகி, 1984-ல் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
 
==இலக்கிய இடம்==
==இலக்கிய இடம்==
 
ஆத்மாநாம் தமிழ் நவீனக் கவிதையில் [[எழுத்து கவிதை இயக்கம்]], [[வானம்பாடி கவிதை இயக்கம்]], அதன் பின் [[கசடதபற (இதழ்)|கசடதபற]] காலகட்டம் ஆகியவற்றுக்குப்பின் அடுத்த காலகட்டத்தை தொடங்கிவைத்தவர் என மதிப்பிடப்படுகிறார். அரசியல்சார்பு, அகவயமான குரல் ஆகிய இரண்டும் அமைந்தவை அவருடைய கவிதைகள். நவீனக் கவிதையில் இருந்த படிமங்கள் சார்ந்த இறுக்கத்தை உடைத்து உரையாடல்தன்மை கொண்ட கவிதைகளையும் நுண்சித்தரிப்புத் தன்மை கொண்ட கவிதைகளையும் எழுதினார். "தமிழில் முந்தைய இரு கவிமரபுகளும் உருவாக்கிய உணர்ச்சிகலவாத இறுக்கத்தை தவிர்த்து உணர்வுகள் வெளிப்படும் மொழி, பகடிமொழி ஆகியவற்றை கவிதைகளில் கையாண்டார்.பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது" என்று எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]] குறிப்பிடுகிறார்.
தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970-களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிப்பின் மூலமாக வழங்கியவர் ஆத்மாநாம்.
"புதுக் கவிஞர்களில் பிரக்ஞைபூர்வமான கவிஞர்கள் மிகக்குறைவு. ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர். தன் செயல்பாடுகள் குறித்தும் தான் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அவருக்கு யோசனைகள் இருந்திருக்கின்றன. தன்னுடைய கவிதைகளை கண்டுபிடிக்கும் முயற்சியாகவே இவர் கவிதைகள் இருக்கின்றன. பிரதிபலிப்பு படைப்பாகாது என்ற விழிப்பு இவரிடம் கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.
 
வாழ்நிலையில் தான் பெற்ற அனுபவங்களை கவிதை மூலம் இவர் ஆராய்ந்து கொண்டே போகிறார். தன்னை அறிந்து தன் பார்வையைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முனைப்பு இது.
 
தன் கவிதைகள் மூலம் ஒரு உயர்நிலை பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார் ஆத்மாநாம். இதனால் தன் கவிதை மொழி தன் சக மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதில் அவருக்கு கவனம் இருந்தது. உலக இலக்கியத்தின் தரம் மீது பற்றுக் கொண்டிருந்தார்.
 
அனுபவங்களின் சாரங்களை அறிய தனக்கு உகந்த தயாரிப்புகளிலும் இவர் கவனம் கொண்டிருந்தார். படிப்பும், தொடர்புகளும், விவாதங்களும், இதனால் காலத்தைப் பற்றிய உணர்வு இவருக்குச் சாத்தியமாயிற்று.
 
பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது." என்று எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]] குறிப்பிடுகிறார்.
 
== படைப்புகள் ==
== படைப்புகள் ==
 
* ஆத்மாநாம் படைப்புகள் (பதிப்பாசிரியர் பிரம்மராஜன்)
* 156 கவிதைகள்
 
* நவீனக் கவிதைக்காக, ‘ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டுவந்தார்.
 
==== கவிதைத் தொகுப்புகள் ====
 
* ஆத்மாநாம் படைப்புகள் (பதிப்பாசிரியர்  
பிரம்மராஜன்)
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.hindutamil.in/news/literature/234689-.html ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்!]
* [https://www.hindutamil.in/news/literature/234689-.html ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்!]
*[https://www.tamilvu.org/ta/library-l9301-html-l9301001-151253 ஆத்மாநாம் கவிதைகள்]
*[https://www.tamilvu.org/ta/library-l9301-html-l9301001-151253 ஆத்மாநாம் கவிதைகள்]
*[https://azhiyasudargal.wordpress.com/category/ஆத்மாநாம்/ ஆத்மாநாம் நேர்காணல் - பிரம்மராஜன்]
*[https://azhiyasudargal.wordpress.com/category/ஆத்மாநாம்/ ஆத்மாநாம் நேர்காணல் - பிரம்மராஜன்]
*[https://www.jeyamohan.in/127821/ ஆத்மாநாம் விருது விழா உரை]  
*[https://www.jeyamohan.in/127821/ ஆத்மாநாம் விருது விழா உரை]  
*[https://www.valaitamil.com/atmanam-kavithaigal_9152.html ஆத்மாநாம் கவிதைகள் - சுந்தர ராமசாமி]
*[https://www.valaitamil.com/atmanam-kavithaigal_9152.html ஆத்மாநாம் கவிதைகள் - சுந்தர ராமசாமி]
 
*[http://siragu.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%88%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE/ ஆத்மாநாம் பிரம்மராஜன் உரையாடல்]
 
*[https://premil1.blogspot.com/p/blog-page_8.html ஆத்மாநாம் கவிதைகள் பிரமிள் இணையப்பக்கம்]
{{being created}}
*[https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/ ஆத்மாநாம் படைப்புகள், அழியாச்சுடர்கள்]
*[https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/14762-2011-05-22-09-13-14 ஆத்மாநாம் படைப்புகள் பற்றி ஆத்மார்த்தி]
*[https://solvanam.com/2011/11/27/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/ என் நண்பர் ஆத்மாநாம் ஸ்டெல்லா புரூஸ். சொல்வனம்]
*[https://kuvikam.com/2019/07/16/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4/ ஆத்மாநாம் நினைவுகள் எஸ்.வைத்தீஸ்வரன்]
*[https://aadhirah.blogspot.com/2010/ ஆத்மாநாம் கவிதைகள் விமர்சனக்குறிப்பு]
*[https://www.shankarwritings.com/2015/07/blog-post_12.html மொழியின் கனவு கவிதை - சங்கர்ராமசுப்ரமணியன்]
*[https://azhiyasudargal.wordpress.com/2013/11/15/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/ பிரம்மராஜன் ஆத்மாநாம் பேட்டி]
*[https://perundevi.com/?p=403 ஆத்மாநாம் கவிதைகள் பெருந்தேவி]
*
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:இலக்கிய விமர்சகர்கள்]]
[[Category:கட்டுரையாளர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 07:23, 24 February 2024

To read the article in English: Atmanam. ‎

jeyamohan.in
ஆத்மாநாம் படைப்புகள் நன்றி panuval.com
ஆத்மாநாம்
என் நண்பர் ஆத்மாநாம்
ஆத்மாநாம் (காகிதத்தில் ஒரு கோடு நூலின் பின்னட்டை ஓவியம். ஆதிமூலம்)

ஆத்மாநாம் (ஜனவரி 18, 1951 - ஜூலை 06, 1984)] கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர். 'ழ' என்ற கவிதை ஏட்டின் ஆசிரியர். தமிழ் நவீனக் கவிதைகளில் முதன்மை ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

ஆத்மாநாம் சென்னையில் ஜனவரி 18, 1951-ல் பிறந்தார். இயற்பெயர் எஸ்.கே.மதுசூதன். அம்பத்தூரில் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பெற்று பிறகு வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்றார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பட்டப்படிப்பை (B. Com) அதே கல்லூரியில் மாலை வகுப்புகளில் சேர்ந்து படித்தார். அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பிகாம்) பயின்றார்.

தனி வாழ்க்கை

ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். 1967--ம் ஆண்டு சதர்ன் சுவிட்ச்கியர்ஸ் என்ற கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். 1968--ம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு கணக்காயர் அலுவலகத்தில் பயிற்சிக்கு சேர்ந்தார். கோரமண்டல் கார்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாரற்றிய பின் 1971- ல் ஆயத்த உடைகள் தயாரிக்கும் நிறுவனமான ரெங்கா அப்பாரெல்ஸ்க்கு மாறினார். 1978--ம் ஆண்டு அய்யப்பன் என்பவருடன் சேர்ந்து டாப்டென் என்ற ஆயத்த உடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை உருவாக்கினார்.

Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு 1979-ல் புரசைவாக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு இன்டர் கிராப்ட் என்ற கம்பெனியில் பணிபுரிந்தார். ஆத்மாநாம், Lithium, Hyportrym, Largatyl, Fenargon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. 1983--ம் ஆண்டு தனக்கு சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துகளையே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். காப்பாற்றப்பட்டார். 1983--ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் Affective Disorderன் இரண்டாவது தாக்குதல் ஆத்மாநாமுக்கு ஏற்பட்டது. 1984 ஜனவரி இறுதிவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984--ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் அவர் பெங்களூரில் அவரது சகோதரர் ரகுநந்தனின் வீட்டில் இருந்தார். மார்ச் 9-ம் தேதி (1984) தனக்குத் தரப்பட்ட மருந்துகளை உட்கொண்டு இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் National Institute of Mental Health and Neurological Sciences மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984--ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதியிலிருந்து 20 வரை NIMHANSல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஏறத்தாழ ‘உயிரற்ற மனித உடம்பாக’ ஆத்மாநாம் வீடு திரும்பியதாக அவரது சகோதரர் ரகுநந்தன் குறிப்பிட்டார் (பிரம்மராஜன் எழுதிய குறிப்புகள்).

இதழியல்

நவீனக் கவிதைக்காக, 'ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டு வந்தார்.ழ' கவிதை இதழின் ஆசிரியராக இருந்தபோதே அவர் '2083 ஒரு அகால ஏடு' என்ற, ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்ட ஒரு இதழைத் துவக்கினார்.

இலக்கிய வாழ்க்கை

மொழியாக்கம்

பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதி வைத்திருந்தார் ஆத்மாநாம். 'எல்சால்வாடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையை மொழி பெயர்த்துள்ளார். பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைத் தேர்வொன்றிற்கு அவர் திட்டம் வைத்திருந்தார். ஆனால் அதில் ஒரு கவிதையை மாத்திரமே மொழிபெயர்த்து முடித்திருந்தார். அந்தோனின் பார்த்துஸெக் என்ற கிழக்கு ஐரோப்பியக் கவிஞரின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை செய்திருந்தார்.

நூல்மதிப்புரைகள்

புத்தக விமர்சனங்களை எழுதுவதிலும், பொறுப்பும் ஈடுபாடும் ஆத்மாநாமுக்கு இருந்தது. விமலாதித்த மாமல்லனின் சிறுகதைத் தொகுப்பிற்கும், ஆனந்தின் 'இரண்டு சிகரங்களுக்கு இடையே' என்ற குறுநாவலுக்கும் அவர் எழுதிய மதிப்புரைகள் மீட்சி இதழில் வந்தன.

கவிதைகள்

ஆத்மாநாம் எழுதியவையாக 156 கவிதைகள் கிடைத்துள்ளன. ஆத்மாநாம் 1981-ல் 'காகிதத்தில் ஒரு கோடு' என்னும் தலைப்பில் தன் 37 கவிதைகளை ழ வெளியீடாக கொண்டுவந்தார். 1989 -ம் ஆண்டு பிரம்மராஜன் (தன்யா-பிரம்மா வெளியீடாக) ஆத்மாநாம் கவிதைகள் என்னும் தலைப்பில் எஞ்சிய கவிதைகளை தொகுத்து ஒரு முழுத்தொகுப்பை வெளியிட்டார். பின்னர் 2002-ல் காலச்சுவடு வெளியீடாக ஆத்மாநாம் எழுதிய 156 கவிதைகள் ஒரு தொகுப்பாக வெளிவந்தன. ஆத்மாநாம் கவிதைகளை தொகுத்து வெளியிட்டும், ஆத்மாநாம் பற்றிய மதிப்பீடுகளை உருவாக்கியும் தமிழ்ச்சூழலில் ஆத்மாநாமை நிலைநிறுத்தியவர் அவருடைய நண்பரான கவிஞர் பிரம்மராஜன்.

கவிஞர் ஆத்மாநாம் விருது

கவிஞர் ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையில் மெய்ப்பொருள் பதிப்பகம் 'கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015--ம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.

மறைவு

ஆத்மாநாம், அஃபெக்ட்டிவ் டிஸார்டர் என்ற மனமுறிவு நோய்க்குள்ளாகி, 1979 முதல் மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தார் என்று அவர் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் சொல்கிறார். ஆத்மாநாம் நோய் முதிர்ந்து ஜூலை 06, 1984-ல் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இலக்கிய இடம்

ஆத்மாநாம் தமிழ் நவீனக் கவிதையில் எழுத்து கவிதை இயக்கம், வானம்பாடி கவிதை இயக்கம், அதன் பின் கசடதபற காலகட்டம் ஆகியவற்றுக்குப்பின் அடுத்த காலகட்டத்தை தொடங்கிவைத்தவர் என மதிப்பிடப்படுகிறார். அரசியல்சார்பு, அகவயமான குரல் ஆகிய இரண்டும் அமைந்தவை அவருடைய கவிதைகள். நவீனக் கவிதையில் இருந்த படிமங்கள் சார்ந்த இறுக்கத்தை உடைத்து உரையாடல்தன்மை கொண்ட கவிதைகளையும் நுண்சித்தரிப்புத் தன்மை கொண்ட கவிதைகளையும் எழுதினார். "தமிழில் முந்தைய இரு கவிமரபுகளும் உருவாக்கிய உணர்ச்சிகலவாத இறுக்கத்தை தவிர்த்து உணர்வுகள் வெளிப்படும் மொழி, பகடிமொழி ஆகியவற்றை கவிதைகளில் கையாண்டார்.பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது" என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

  • ஆத்மாநாம் படைப்புகள் (பதிப்பாசிரியர் பிரம்மராஜன்)

உசாத்துணை


✅Finalised Page