first review completed

ஆதவன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Second Review)
Line 1: Line 1:
{{Read English|Aadhavan|Aadhavan|Name of target article=Aadhavan|Title of target article=Aadhavan}}
{{Read English|Aadhavan|Aadhavan|Name of target article=Aadhavan|Title of target article=Aadhavan}}
[[File:Aadhavan.jpg|thumb|எழுத்தாளர் ஆதவன்]]
[[File:Aadhavan.jpg|thumb|எழுத்தாளர் ஆதவன்]]
ஆதவன் (மார்ச் 21, 1942 - ஜூலை 24, 1987). அறுபதுகளுக்கு பின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை எழுதிய தமிழ் எழுத்தாளர். இந்திய பெருநகர வாழ்வையும் அங்கு மனித அகங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளையும் எழுதிய முக்கியமான படைப்பாளி. ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்.
ஆதவன் (மார்ச் 21, 1942 - ஜூலை 19, 1987). அறுபதுகளுக்கு பின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை எழுதிய தமிழ் எழுத்தாளர். இந்திய பெருநகர வாழ்வையும் அங்கு மனித அகங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளையும் எழுதிய முக்கியமான படைப்பாளி. ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்.


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
இயற்பெயர் கே.எசு. சுந்தரம். மார்ச் 21, 1942 அன்று பிறந்தார். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சி. டெல்லியில் தன் கல்லூரி படிப்பை படித்தார்.
இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். மார்ச் 21, 1942 அன்று பிறந்தார். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சி. டெல்லியில் தன் கல்லூரி படிப்பை முடித்தார்.


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
இந்திய ரயில்வேயில் ஏழு ஆண்டுகாலம் வேலை செய்தார். 1975 முதல் நேஷ்னல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் பிரிவில் துணையாசிரியராக டெல்லியிலும், 1984-க்கு பின் பெங்களூரிலும் பணி புரிந்தார்.
இந்திய ரயில்வேயில் ஏழு ஆண்டுகாலம் வேலை செய்தார். 1975 முதல் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் பிரிவில் துணையாசிரியராக டெல்லியிலும், 1984-க்கு பின் பெங்களூரிலும் பணி புரிந்தார்.


1976-ல் திருமணம். மனைவி ஹேமா. இவர் ஆதவனின் மறைவுக்கு பின் நேசனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தனக்கு கிடைத்த பணியை தொடர்ந்தார். பிள்ளைகள் சாருமதி, நீரசா.
1976-ல் திருமணம். மனைவி ஹேமா. இவர் ஆதவனின் மறைவுக்கு பின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தனக்கு கிடைத்த பணியை தொடர்ந்தார். மகள்கள் சாருமதி, நீரஜா.


== மறைவு ==  
== மறைவு ==  
ஜூலை 24, 1987 அன்று தனது 45-வது வயதில் சிருங்கேரியில் துங்கபத்ரா நதியின் சுழலில் உயிர் இழந்தார்.
ஜூலை 19, 1987 அன்று சிருங்கேரியில் துங்கபத்ரா நதியின் சுழலில் சிக்கி உயிர் இழந்தார்.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
பள்ளி பருவத்தில் கல்வி, விளையாட்டு என்று எதிலும் தன்னுடைய தனித்தன்மையை வெளிக்காட்ட முடியாதமையால் உருவான  தனிமையை போக்கிக்கொள்ள ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது  நண்பன் ஒருவனோடு இணைந்து “அணுகுண்டு” என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தியுள்ளார்.
பள்ளி பருவத்தில் கல்வி, விளையாட்டு என்று எதிலும் தன்னுடைய தனித்தன்மையை வெளிக்காட்ட முடியாமையால் உருவான  தனிமையை போக்கிக்கொள்ள ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது  நண்பன் ஒருவனோடு இணைந்து 'அணுகுண்டு' என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார்.


‘சிங்கராஜ குமாரி’ ‘கானகத்தின் நடுவே’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் சிறார் இலக்கிய பங்களிப்பு. 1962-ல் கல்லூரி காலகட்டத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆகிறார்.ஆனந்த விகடனில் எழுதிய கதைகள் தொடர்ந்து முத்திரைக் கதைகளாக வெளிவந்தன.அதை தொடர்ந்து நா.பார்த்தசாரதி ஆசிரியத்துவத்தில் வெளிவந்த தீபம் இதழிலும் கதைகள் வெளிவந்தன. முதல் நாவலான காகித மலர்கள் தீபம் இதழில் வெளிவந்த நாவல் தொடர். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் அசோகமித்திரன் இவருக்கு அணுக்கமான மூத்த படைப்பாளிகள்.
‘சிங்கராஜ குமாரி’, ‘கானகத்தின் நடுவே’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் சிறார் இலக்கிய பங்களிப்பு. 1962-ல் கல்லூரி காலகட்டத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆனார். ஆனந்த விகடனில் எழுதிய கதைகள் தொடர்ந்து முத்திரைக் கதைகளாக வெளிவந்தன. அதை தொடர்ந்து நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழிலும் கதைகள் வெளிவந்தன. முதல் நாவலான 'காகித மலர்கள்' தீபம் இதழில் தொடராக வெளிவந்தது. இந்திரா பார்த்தசாரதி மற்றும் அசோகமித்திரன் இவருக்கு அணுக்கமான மூத்த படைப்பாளிகள்.


== இலக்கிய அழகியல் ==
== இலக்கிய அழகியல் ==
இந்திய பெருநகர வாழ்க்கை சூழலை கதைக்களமாக கொண்ட இவரது படைப்புகள் உயர்குடி பண்பாட்டில் உள்ள அபத்தங்களை நுணுக்கமாக சித்தரிக்ககூடியது. வாழ்க்கையில் மனித அகம் செய்யும் பாவனைகள் சுயஏமாற்றுகளை பகுத்தாயும் விதத்தில் உளவியல் அணுகுமுறையோடு விவரித்து காட்டிய படைப்பாளி. நகர் வாழ்க்கையின் நவீனத்திற்க்குள் தங்களை முழுவதும் பொருத்திகொள்ளமுடியாமல் மரபின் ஆச்சாரத்துக்குள்ளும் இருந்துவிடமுடியாத மத்தியதர இளைஞர்கள் மற்றும் மனிதர்களின் உள்முரண்கள் பதிவானது இவருடைய படைப்புலகம்.
இந்திய பெருநகர வாழ்க்கை சூழலை கதைக்களமாக கொண்ட இவரது படைப்புகள் உயர்குடி பண்பாட்டில் உள்ள அபத்தங்களை நுணுக்கமாக சித்தரிப்பவை. வாழ்க்கையில் மனித அகம் செய்யும் பாவனைகள் சுயஏமாற்றுகளை பகுத்தாயும் விதத்தில் உளவியல் அணுகுமுறையோடு விவரித்து காட்டிய படைப்பாளி. நகர் வாழ்க்கையின் நவீனத்திற்குள் தங்களை முழுவதும் பொருத்திகொள்ளமுடியாமல் மரபின் ஆசாரத்துக்குள்ளும் இருந்துவிடமுடியாத மத்தியதர இளைஞர்கள் மற்றும் மனிதர்களின் உள்முரண்கள் பதிவானது இவருடைய படைப்புலகம்.  
‘காகித மலர்கள்’, ‘என் பெயர் ராமசேஷன்’ ஆகிய முக்கியமான நாவல்கள் இரண்டும் டெல்லியை கதைகளமாக கொண்டவை. ‘ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்’, ‘முதலில் இரவு வரும்’, ‘சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல், ‘லேடி’ போன்ற சிறுகதைகள் விமர்சகர்களால் முதன்மையாக பரிந்துரைக்கபடும் படைப்புகள்.
‘காகித மலர்கள்’, ‘என் பெயர் ராமசேஷன்’ ஆகிய முக்கியமான நாவல்கள் இரண்டும் டெல்லியை கதைகளமாக கொண்டவை. ‘ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்’, ‘முதலில் இரவு வரும்’, ‘சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்', ‘லேடி’ போன்ற சிறுகதைகள் விமர்சகர்களால் முதன்மையாக பரிந்துரைக்கபடும் படைப்புகள்.


அசோகமித்திரன் - “அது 1967-ஆம் ஆண்டு. மிகக் குறுகிய இடைவெளியில் 'இண்டர்வியூ' 'அப்பர் பெர்த்' என அவருடைய இரு பக்குவமிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்தரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை.”
அசோகமித்திரன் - “அது 1967-ஆம் ஆண்டு. மிகக் குறுகிய இடைவெளியில் 'இண்டர்வியூ', 'அப்பர் பெர்த்' என அவருடைய இரு பக்குவமிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்தரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை.”


== விருது ==
== விருது ==


* மறைவுக்கு பின், 1987-ஆம் ஆண்டு 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்திய அகதெமி விருது வழங்கப்பட்டது.
* மறைவுக்கு பின், 1987-ஆம் ஆண்டு 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.


== படைப்புகள்/நூல்கள் ==  
== படைப்புகள்/நூல்கள் ==  
Line 56: Line 56:


====== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ======
====== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ======
* என் பெயர் ராமசேஷன்- ரசிய மொழி,  Vitaliy Furnika
* என் பெயர் ராமசேஷன்- ரஷ்ய மொழி,  Vitaliy Furnika


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 16:23, 17 February 2022

To read the article in English: Aadhavan. ‎

எழுத்தாளர் ஆதவன்

ஆதவன் (மார்ச் 21, 1942 - ஜூலை 19, 1987). அறுபதுகளுக்கு பின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை எழுதிய தமிழ் எழுத்தாளர். இந்திய பெருநகர வாழ்வையும் அங்கு மனித அகங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளையும் எழுதிய முக்கியமான படைப்பாளி. ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். மார்ச் 21, 1942 அன்று பிறந்தார். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சி. டெல்லியில் தன் கல்லூரி படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

இந்திய ரயில்வேயில் ஏழு ஆண்டுகாலம் வேலை செய்தார். 1975 முதல் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் பிரிவில் துணையாசிரியராக டெல்லியிலும், 1984-க்கு பின் பெங்களூரிலும் பணி புரிந்தார்.

1976-ல் திருமணம். மனைவி ஹேமா. இவர் ஆதவனின் மறைவுக்கு பின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தனக்கு கிடைத்த பணியை தொடர்ந்தார். மகள்கள் சாருமதி, நீரஜா.

மறைவு

ஜூலை 19, 1987 அன்று சிருங்கேரியில் துங்கபத்ரா நதியின் சுழலில் சிக்கி உயிர் இழந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பள்ளி பருவத்தில் கல்வி, விளையாட்டு என்று எதிலும் தன்னுடைய தனித்தன்மையை வெளிக்காட்ட முடியாமையால் உருவான  தனிமையை போக்கிக்கொள்ள ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது  நண்பன் ஒருவனோடு இணைந்து 'அணுகுண்டு' என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார்.

‘சிங்கராஜ குமாரி’, ‘கானகத்தின் நடுவே’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் சிறார் இலக்கிய பங்களிப்பு. 1962-ல் கல்லூரி காலகட்டத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆனார். ஆனந்த விகடனில் எழுதிய கதைகள் தொடர்ந்து முத்திரைக் கதைகளாக வெளிவந்தன. அதை தொடர்ந்து நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழிலும் கதைகள் வெளிவந்தன. முதல் நாவலான 'காகித மலர்கள்' தீபம் இதழில் தொடராக வெளிவந்தது. இந்திரா பார்த்தசாரதி மற்றும் அசோகமித்திரன் இவருக்கு அணுக்கமான மூத்த படைப்பாளிகள்.

இலக்கிய அழகியல்

இந்திய பெருநகர வாழ்க்கை சூழலை கதைக்களமாக கொண்ட இவரது படைப்புகள் உயர்குடி பண்பாட்டில் உள்ள அபத்தங்களை நுணுக்கமாக சித்தரிப்பவை. வாழ்க்கையில் மனித அகம் செய்யும் பாவனைகள் சுயஏமாற்றுகளை பகுத்தாயும் விதத்தில் உளவியல் அணுகுமுறையோடு விவரித்து காட்டிய படைப்பாளி. நகர் வாழ்க்கையின் நவீனத்திற்குள் தங்களை முழுவதும் பொருத்திகொள்ளமுடியாமல் மரபின் ஆசாரத்துக்குள்ளும் இருந்துவிடமுடியாத மத்தியதர இளைஞர்கள் மற்றும் மனிதர்களின் உள்முரண்கள் பதிவானது இவருடைய படைப்புலகம். ‘காகித மலர்கள்’, ‘என் பெயர் ராமசேஷன்’ ஆகிய முக்கியமான நாவல்கள் இரண்டும் டெல்லியை கதைகளமாக கொண்டவை. ‘ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்’, ‘முதலில் இரவு வரும்’, ‘சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்', ‘லேடி’ போன்ற சிறுகதைகள் விமர்சகர்களால் முதன்மையாக பரிந்துரைக்கபடும் படைப்புகள்.

அசோகமித்திரன் - “அது 1967-ஆம் ஆண்டு. மிகக் குறுகிய இடைவெளியில் 'இண்டர்வியூ', 'அப்பர் பெர்த்' என அவருடைய இரு பக்குவமிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்தரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை.”

விருது

  • மறைவுக்கு பின், 1987-ஆம் ஆண்டு 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

படைப்புகள்/நூல்கள்

சிறுகதை தொகுப்பு
  • கனவுக்குமிழிகள் - 1975
  • கால் வலி - 1975
  • ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - 1980
  • புதுமைப்பித்தனின் துரோகம் - 1981
  • முதலில் இரவு வரும் - 1985
  • நிழல்கள்
  • ஆதவன் சிறுகதைகள் - முழுதொகுப்பு
நாடகம்
  • புழுதியில் வீணை
குறுநாவல்
  • இரவுக்கு முன்பு வருவது மாலை
  • சிறகுககள்
  • மீட்சியைத் தேடி
  • கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
  • நதியும் மலையும்
  • பெண், தோழி, தலைவி
நாவல்
  • காகித மலர்கள் - 1977
  • என் பெயர் ராமசேஷன் - 1980
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • என் பெயர் ராமசேஷன்- ரஷ்ய மொழி, Vitaliy Furnika

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.