அ.கி. பரந்தாமனார்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:அ.கி. பரந்தாமனார்.jpg|thumb]] | [[File:அ.கி. பரந்தாமனார்.jpg|thumb]] | ||
அ. கி. பரந்தாமனார் (பிறப்பு ஜூலை 15, 1905) தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், வரலாற்று ஆசிரியர் மற்றும் சொற்பொழிவாளராக பன்முக ஆளுமை கொண்டவர். முழுப்பெயர் அல்லிக்குழி கிருஷ்ணசாமி பரந்தாமனார். | |||
==வாழ்க்கை குறிப்பு== | |||
====== பிறப்பு====== | |||
இவர் ஜூலை 15, 1905 ஆம் ஆண்டு சென்னையில் கிருஷ்ணசாமி முதலியார், சிவனாத்தி அம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். | இவர் ஜூலை 15, 1905 ஆம் ஆண்டு சென்னையில் கிருஷ்ணசாமி முதலியார், சிவனாத்தி அம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். | ||
=====குடும்பம்===== | |||
அ.கி.பரந்தாமனாரின் மகன் அ.ப. சோமசுந்தரம் கல்வித்துறையில் உள்ளார். | |||
=====கல்வி===== | |||
சென்னை வேப்பேரியில் உள்ள செயின்ட் பால் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவரை பயின்றார். பின்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை படிப்பை முடித்தார். பின்பு ஓராண்டு சென்னை கர்னாடிக் பஞ்சாலையில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அரசியல், வரலாறு ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்று இளங்கலை பட்டத்தையும், 1949 ஆம் ஆண்டில் முதுகலை பட்டத்தையும் பெற்றார். | சென்னை வேப்பேரியில் உள்ள செயின்ட் பால் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவரை பயின்றார். பின்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை படிப்பை முடித்தார். பின்பு ஓராண்டு சென்னை கர்னாடிக் பஞ்சாலையில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அரசியல், வரலாறு ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்று இளங்கலை பட்டத்தையும், 1949 ஆம் ஆண்டில் முதுகலை பட்டத்தையும் பெற்றார். | ||
======பணி====== | |||
தம் முதுகலைப் படிப்பை முடித்த உடன் சென்னை வேப்பேரியில் உள்ள செயின்ட் பால் உயர்நிலைப் பள்ளியில் ஏறத்தாழ 24 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். | தம் முதுகலைப் படிப்பை முடித்த உடன் சென்னை வேப்பேரியில் உள்ள செயின்ட் பால் உயர்நிலைப் பள்ளியில் ஏறத்தாழ 24 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். | ||
அதன் பின்னர் 1950 ஜனவரியில் மதுரையில் தியாகராசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதும் அங்கு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு 17ஆண்டுகள் பணியாற்றி 1967 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். | அதன் பின்னர் 1950 ஜனவரியில் மதுரையில் தியாகராசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதும் அங்கு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு 17ஆண்டுகள் பணியாற்றி 1967 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழகப் புலவர் குழு முதலான அமைப்புகளில் வல்லுநராக பங்கெடுத்தார். | ||
==பங்களிப்பு== | |||
=====வரலாற்றெழுத்து===== | |||
பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் ஆங்கிலத்தில் எழுதிய ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலை அடியொற்றியும், க.அ.நீலகண்ட சாஸ்திரியாரின் ‘தென்னிந்திய வரலாறு’ டாக்டர் அ.கிருஷ்ணசாமிப்பிள்ளை எழுதிய ‘விஜயநகரத்தின் கீழ் தமிழகம்’ [Tamil Country under Vijayanagara] முதலிய நூல்களை கணக்கில் கொண்டும் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ தெளிவாகவும் சுருக்கமாகவும் நாயக்கர்களின் ஆட்சியையும் வீட்சியையும் சொல்லும் வரலாற்று நூலாகும் | பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் ஆங்கிலத்தில் எழுதிய ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலை அடியொற்றியும், க.அ.நீலகண்ட சாஸ்திரியாரின் ‘தென்னிந்திய வரலாறு’ டாக்டர் அ.கிருஷ்ணசாமிப்பிள்ளை எழுதிய ‘விஜயநகரத்தின் கீழ் தமிழகம்’ [Tamil Country under Vijayanagara] முதலிய நூல்களை கணக்கில் கொண்டும் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ தெளிவாகவும் சுருக்கமாகவும் நாயக்கர்களின் ஆட்சியையும் வீட்சியையும் சொல்லும் வரலாற்று நூலாகும் | ||
இவர் தமிழ்நாடு பத்திரிக்கையில் சுமார் 13 வருடங்கள் வரலாற்று சம்பந்தமான களஆய்வு செய்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். | |||
======தமிழ் வளர்ச்சி====== | |||
தமிழ் வளர்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனித்தமிழ் வளர்ச்சி நடவடிக்கைகளிலும், அதற்கான நூல்களை உருவாக்குவதிலும் முனைப்பு கொண்டவராக அறியப்படுகிறார். | |||
மதுரை கருமுத்து தியாகராசர் நடத்திவந்த ‘தமிழ்நாடு’ நாளிதழில் எழுத்துத் தமிழைப் பிழையின்றி எழுத பயிற்சியளிக்கும் கட்டுரைகளை வாரந்தோறும் எழுதிவந்தார். பின்னர் இவை தொகுக்கப்பட்டு ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா?’ என்ற பெயரில் வெளியிடப்பட்டன. தற்கால தமிழ் உரைநடைக்கு நெருக்கமான இலக்கணத்தை அறிமுகம் செய்யும் ஒரு முக்கியமான வழிகாட்டி நூலாக இது கருதப்படுகிறது. | |||
சென்னையில் 1925 வாக்கில் தென்னிந்தியத் தமிழ்க் கல்வி கழகம் அமைப்பைத் தோற்றுவித்துத் தமிழ் வகுப்புகளை நடத்தியுள்ளார். | |||
இவரது மகன் அ.ப. சோமசுந்தரன் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் அ.கி. பரந்தாமனார் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார். | |||
==விருதுகள்== | |||
* "பைந்தமிழ்ப் பாவலர்" - மதுரை எழுத்தாளர் மன்றம், மதுரை திருவள்ளுவர் கழகம், அ.கி. பரந்தாமனார் மணிவிழா | |||
* "திரு.வி.க. விருது"- தமிழக அரசு , தஞ்சையில் 1981ஆம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழக தொடக்கவிழா | |||
==இலக்கிய இடம்== | |||
இவர் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ நூலுக்காகவும், தமிழ் உரைநடை இலக்கணங்களை கற்க ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா?’ எனும் நூலுக்காகவும் இலக்கிய உலகில் மேற்கோள் காட்டப்படுகிறார். | |||
இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்தேசிய சிந்தனைகள் ஒங்கியிருந்தபோது நாயக்கர் கால வரலாற்றெழுத்து பற்றி எழுத பரவலான தயக்கம் இருந்தது. இத்தயக்கத்தை மீறி முன்னெழுந்த முக்கியமான வரலாற்றெழுத்து பங்களிப்பாக அ.கி. பரந்தாமனாரின் நூல் கருதப்படுகிறது. | |||
கல்லூரிகளில் இவரது மாணவர்களாக இருந்த [[அப்துல்_ரகுமான்|அப்துல் ரகுமான்]], [[மீரா_(தமிழ்_கவிஞர்)|மீரா]], [[நா._காமராசன்|நா. காமராசன்]], [[மு._மேத்தா|மு. மேத்தா]], [[இன்குலாப்]], [[அபிபுல்லா]] என்று ஒரு கவிஞர் நிரை அடையாளம் காணப்படுகிறது. | |||
==மறைவு== | |||
அ.கி. பரந்தாமனார் 1986 ஆம் ஆண்டில் சென்னையில் மரணமடைந்தார் | |||
==படைப்புகள்== | |||
* காதல்நிலைக் கவிதைகள் (1954) | |||
* எங்கள் தோட்டம் (1964) - சிறுவர் பாடல் | |||
* பரந்தாமனார் கவிதைகள் | |||
* கவிஞராக | |||
* நல்ல தமிழ் எழுத வேண்டுமா? | |||
* தமிழ் இலக்கியம் கற்க | |||
* திருக்குறளும் புதுமைக் கருத்துக்களும் (1963) | |||
* பன்முகப் பார்வையாளன் பாரதி | |||
* பேச்சாளராக | |||
* மதுரை நாயக்கர் வரலாறு | |||
* திருமலை நாயக்கர் வரலாறு | |||
* தலைசிறந்த பாண்டிய மன்னர்கள் | |||
* வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும் | |||
* வாழ்க்கைக்கலை | |||
* கோமஸ் | |||
==உசாத்துணை== | |||
* பல்துறை வித்தகர் அ.கி.பரந்தாமனார், அ.ப. சோமசுந்தரன், 2009, அல்லி நிலையம். (அ.கி. பரந்தாமனார் பற்றிய ஆய்வுக் கருத்தரங்கங்களின் தொகுப்பு) | |||
* [https://www.jeyamohan.in/15/ மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ), ஜெயமோகன்.இன்] | |||
* [http://nadeivasundaram.blogspot.com/2020/06/ பேரா. அ.கி. பரந்தாமனார், ந. தெய்வ சுந்தரம் பதிவு] | |||
* [https://www.youtube.com/watch?v=9MkiKcDcWiY அ.கி பரந்தாமனார் |முன்னோர்கள் |கிருணாமூர்த்தி] | |||
{{being created}} | {{being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 13:04, 10 February 2022
அ. கி. பரந்தாமனார் (பிறப்பு ஜூலை 15, 1905) தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், வரலாற்று ஆசிரியர் மற்றும் சொற்பொழிவாளராக பன்முக ஆளுமை கொண்டவர். முழுப்பெயர் அல்லிக்குழி கிருஷ்ணசாமி பரந்தாமனார்.
வாழ்க்கை குறிப்பு
பிறப்பு
இவர் ஜூலை 15, 1905 ஆம் ஆண்டு சென்னையில் கிருஷ்ணசாமி முதலியார், சிவனாத்தி அம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.
குடும்பம்
அ.கி.பரந்தாமனாரின் மகன் அ.ப. சோமசுந்தரம் கல்வித்துறையில் உள்ளார்.
கல்வி
சென்னை வேப்பேரியில் உள்ள செயின்ட் பால் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவரை பயின்றார். பின்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை படிப்பை முடித்தார். பின்பு ஓராண்டு சென்னை கர்னாடிக் பஞ்சாலையில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அரசியல், வரலாறு ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்று இளங்கலை பட்டத்தையும், 1949 ஆம் ஆண்டில் முதுகலை பட்டத்தையும் பெற்றார்.
பணி
தம் முதுகலைப் படிப்பை முடித்த உடன் சென்னை வேப்பேரியில் உள்ள செயின்ட் பால் உயர்நிலைப் பள்ளியில் ஏறத்தாழ 24 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
அதன் பின்னர் 1950 ஜனவரியில் மதுரையில் தியாகராசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதும் அங்கு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு 17ஆண்டுகள் பணியாற்றி 1967 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழகப் புலவர் குழு முதலான அமைப்புகளில் வல்லுநராக பங்கெடுத்தார்.
பங்களிப்பு
வரலாற்றெழுத்து
பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் ஆங்கிலத்தில் எழுதிய ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலை அடியொற்றியும், க.அ.நீலகண்ட சாஸ்திரியாரின் ‘தென்னிந்திய வரலாறு’ டாக்டர் அ.கிருஷ்ணசாமிப்பிள்ளை எழுதிய ‘விஜயநகரத்தின் கீழ் தமிழகம்’ [Tamil Country under Vijayanagara] முதலிய நூல்களை கணக்கில் கொண்டும் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ தெளிவாகவும் சுருக்கமாகவும் நாயக்கர்களின் ஆட்சியையும் வீட்சியையும் சொல்லும் வரலாற்று நூலாகும்
இவர் தமிழ்நாடு பத்திரிக்கையில் சுமார் 13 வருடங்கள் வரலாற்று சம்பந்தமான களஆய்வு செய்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்.
தமிழ் வளர்ச்சி
தமிழ் வளர்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனித்தமிழ் வளர்ச்சி நடவடிக்கைகளிலும், அதற்கான நூல்களை உருவாக்குவதிலும் முனைப்பு கொண்டவராக அறியப்படுகிறார்.
மதுரை கருமுத்து தியாகராசர் நடத்திவந்த ‘தமிழ்நாடு’ நாளிதழில் எழுத்துத் தமிழைப் பிழையின்றி எழுத பயிற்சியளிக்கும் கட்டுரைகளை வாரந்தோறும் எழுதிவந்தார். பின்னர் இவை தொகுக்கப்பட்டு ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா?’ என்ற பெயரில் வெளியிடப்பட்டன. தற்கால தமிழ் உரைநடைக்கு நெருக்கமான இலக்கணத்தை அறிமுகம் செய்யும் ஒரு முக்கியமான வழிகாட்டி நூலாக இது கருதப்படுகிறது.
சென்னையில் 1925 வாக்கில் தென்னிந்தியத் தமிழ்க் கல்வி கழகம் அமைப்பைத் தோற்றுவித்துத் தமிழ் வகுப்புகளை நடத்தியுள்ளார்.
இவரது மகன் அ.ப. சோமசுந்தரன் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் அ.கி. பரந்தாமனார் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார்.
விருதுகள்
- "பைந்தமிழ்ப் பாவலர்" - மதுரை எழுத்தாளர் மன்றம், மதுரை திருவள்ளுவர் கழகம், அ.கி. பரந்தாமனார் மணிவிழா
- "திரு.வி.க. விருது"- தமிழக அரசு , தஞ்சையில் 1981ஆம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழக தொடக்கவிழா
இலக்கிய இடம்
இவர் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ நூலுக்காகவும், தமிழ் உரைநடை இலக்கணங்களை கற்க ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா?’ எனும் நூலுக்காகவும் இலக்கிய உலகில் மேற்கோள் காட்டப்படுகிறார்.
இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்தேசிய சிந்தனைகள் ஒங்கியிருந்தபோது நாயக்கர் கால வரலாற்றெழுத்து பற்றி எழுத பரவலான தயக்கம் இருந்தது. இத்தயக்கத்தை மீறி முன்னெழுந்த முக்கியமான வரலாற்றெழுத்து பங்களிப்பாக அ.கி. பரந்தாமனாரின் நூல் கருதப்படுகிறது.
கல்லூரிகளில் இவரது மாணவர்களாக இருந்த அப்துல் ரகுமான், மீரா, நா. காமராசன், மு. மேத்தா, இன்குலாப், அபிபுல்லா என்று ஒரு கவிஞர் நிரை அடையாளம் காணப்படுகிறது.
மறைவு
அ.கி. பரந்தாமனார் 1986 ஆம் ஆண்டில் சென்னையில் மரணமடைந்தார்
படைப்புகள்
- காதல்நிலைக் கவிதைகள் (1954)
- எங்கள் தோட்டம் (1964) - சிறுவர் பாடல்
- பரந்தாமனார் கவிதைகள்
- கவிஞராக
- நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
- தமிழ் இலக்கியம் கற்க
- திருக்குறளும் புதுமைக் கருத்துக்களும் (1963)
- பன்முகப் பார்வையாளன் பாரதி
- பேச்சாளராக
- மதுரை நாயக்கர் வரலாறு
- திருமலை நாயக்கர் வரலாறு
- தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்
- வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும்
- வாழ்க்கைக்கலை
- கோமஸ்
உசாத்துணை
- பல்துறை வித்தகர் அ.கி.பரந்தாமனார், அ.ப. சோமசுந்தரன், 2009, அல்லி நிலையம். (அ.கி. பரந்தாமனார் பற்றிய ஆய்வுக் கருத்தரங்கங்களின் தொகுப்பு)
- மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ), ஜெயமோகன்.இன்
- பேரா. அ.கி. பரந்தாமனார், ந. தெய்வ சுந்தரம் பதிவு
- அ.கி பரந்தாமனார் |முன்னோர்கள் |கிருணாமூர்த்தி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.