அறந்தை நாராயணன்
From Tamil Wiki
அறந்தை நாராயணன் (நாராயணன்: பிறப்பு ஜூன் 20, 1942; இறப்பு: ஜனவரி 3, 2001) எழுத்தாளர். இதழாளர். பத்திரிகை ஆசிரியர். நாடக ஆசிரியர். நடிகர். முற்போக்கு இயக்கம் சார்ந்து இயங்கினார். தமிழ்த் திரைப்பட வரலாற்றை முழுமையாக எழுதி ஆவணப்படுனார். ‘தமிழ் சினிமாவின் கதை’ என்னும் அந்த நூலுக்காக குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றார். குடியரசுத் தலைவரின் விருது பெற்ற முதல் தமிழ்ப் பத்திரிகையாளர்.
பிறப்பு, கல்வி