அருஷா ஜெயராஜா: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 15: | Line 15: | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE,_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE அருஷா ஜெயராஜா: நூலகம்] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE,_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE அருஷா ஜெயராஜா: நூலகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 19:13, 21 February 2024
அருஷா ஜெயராஜா (பிறப்பு: ஜூலை 6, 1986) ஈழத்துப் பெண் எழுத்தாளர். கவிதைகள், புனைவுகள் எழுதி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
அருஷா ஜெயராஜா இலங்கை திருகோணமலையில் அருள்தாஸ், வாஷிஹா இணையருக்கு ஜூலை 6, 1986-ல் பிறந்தார். திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் பள்ளிக்கல்வி பயின்றார். சிறுவர் உளவியல் தொடர்பான டிப்ளோமா, ஆங்கிலத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார். பாலர் பள்ளியொன்றை நடத்தி வருகிறார்.
அமைப்புப் பணிகள்
- திருகோணமலையில் உள்ள அன்பு இல்லத்தில் உறுப்பினராக இருந்து அங்குள்ள பிள்ளைகளுக்கு சேவை செய்து வருகிறார்.
- ஆதிமொழி உதவும் கரங்களின் ஸ்தாபகர். இது ஒரு அரசு சார்பற்ற அமைப்பு. இதன்வழியாக பின்தங்கிய கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவருவதோடு அவர்களுக்காக கல்வி ரீதியிலான கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.
- சமயம் சார்ந்த சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
அருஷா கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார். திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தின் ஸ்தாபகரான அன்னை தங்கம்மா சண்முகம்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை 2017-ல் வெளியிட்டுள்ளார்.
நூல் பட்டியல்
- அன்னை தங்கம்மா சண்முகம்பிள்ளை (2017)
உசாத்துணை
✅Finalised Page