அரிமளம் சு.பத்மநாபன்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) |
Tamizhkalai (talk | contribs) |
||
Line 25: | Line 25: | ||
* பழந்தமிழ் நூல்கள் காட்டும் பழந்தமிழர் வாழ்க்கை, கடல் வணிகம், முத்துக் குளித்தல், மற்றும் பல தொழில் நுட்பங்கள் குறித்து 20 காட்சிக் குறும்படங்கள் (Visual Episodes) உருவாக்கம் | * பழந்தமிழ் நூல்கள் காட்டும் பழந்தமிழர் வாழ்க்கை, கடல் வணிகம், முத்துக் குளித்தல், மற்றும் பல தொழில் நுட்பங்கள் குறித்து 20 காட்சிக் குறும்படங்கள் (Visual Episodes) உருவாக்கம் | ||
* தமிழின் பன்மை பற்றிய பன்முக ஆய்வுத் | * தமிழின் பன்மை பற்றிய பன்முக ஆய்வுத் திட்டத்தில் மரபு வழித் தமிழ்ச் செய்யுள் படிக்கும் மரபினை மீட்டெடுக்கும் முயற்சியாக பழந்தமிழிப் பாக்கள் மரபுவழி படித்தல்,தொல்காப்பியம் மற்றும் பத்துப்பாட்டு முற்றோதல் ஆகிய குறுவட்டுகள் தயாரிப்பு. | ||
* பல்கலைக்கழக, கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செய்யுளை மரபுவழிப் படிக்கும் | * பல்கலைக்கழக, கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செய்யுளை மரபுவழிப் படிக்கும் பயிற்சியளிப்பு | ||
''' | * ''பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை'' (முதல்வர் கருணாநிதி அவர்கள் தலைமை) மற்றும் ''பண்டைக் காலத் தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும்'' (மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை) மாநாடுகளின் ஒருங்கிணைப்பு | ||
* | * தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் (10 -28 நாட்கள் வரை)தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களிலும் , குறிப்பாக, தமிழ், இசை,நாடகத் துறை, திரைப்படக் கல்லூரி மற்றும் கவின்கலைக் கல்லூரிகளில் நடத்தப்பட்டன. | ||
* ''தமிழ்தாத்தா உ.வே.சா''. பிறந்த நாளை ஒட்டிய சங்க இலக்கிய வார கொண்டாட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஒருங்கிணைந்து 115 ஊர்களில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட சங்க இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒருங்கிணைத்து நடத்துதல். | |||
''தமிழ்தாத்தா உ.வே.சா''. பிறந்த நாளை ஒட்டிய சங்க இலக்கிய வார கொண்டாட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஒருங்கிணைந்து 115 ஊர்களில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட சங்க இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள் |
Revision as of 02:51, 6 March 2022
அரிமளம் சு.பத்மநாபன் தமிழிசைக் கலைஞர் , ஆராய்ச்சியாளர், இசையாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்.தொல்காப்பியத்தையும், பத்துப்பாட்டையும் செம்மொழி நிறுவனத்திற்காக முற்றோதல் வகையில் ஆவணப்படுத்தியவர்.தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் , (NCERT) தேசிய சேர்ந்திசைப் பயிற்றுனராகப் பணி புரிந்தவர். இந்தோளப் பண் பாடுவதில் தேர்ந்தவர். தமிழின் முதல் ‘இசைத் தமிழ்க் கலைச் சொல் அகராதி’யின் தொகுப்பு ஆசிரியர்.
பிறப்பு,கல்வி
அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள் புதுக்கோட்டையை அடுத்த அரிமளம் என்ற ஊரில் ஜூன் 14.1951 அன்று இசைக்கலைஞர் அரிமளம் சுப்பிரமணியம் (புகழ்பெற்ற அரிமளம் சகோதரர்களில் மூத்தவர்), மங்களம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். அரிமளத்தில் உயர்நிலைக் கல்வியும், தந்தையாரிடம் முறைப்படி மரபிசையும் கற்று ஆங்கில இலக்கியத்திலும் கல்வியியலிலும் முதுகலை பயின்றார். “தவத்திரு சங்கரதாஸ் சுவாமி களின் நாடகங்களில் இசைக் கூறுகள்” என்னும் தலைப்பில் தமிழ் மரபுவழி நாடக இசையில் ஆய்வு மேற்கொண்டு 1998ஆம் ஆண்டில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.
கல்விப்பணி
இசையாசிரியர்-புதுச்சேரி மத்திய அரசுப்பள்ளி(கேந்த்ரிய வித்யாலயா)(1996)
இசையாசிரியர் (17 ஆண்டுகள்) ஆங்கில ஆசிரியர் (7 ஆண்டுகள்)- புதுவை அரசின் கல்வித் துறை( 1977 -2000)
வருகைதரு பேராசிரியர்
நிகழ்கலைத் துறை, புதுவைப் பல்கலைக் கழகம்,
இசைத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
உள்ளுறை ஆய்வுத் தகைஞர் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்,
இலக்கியப் பணி
அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு இசைத்தமிழ், நாடகத்தமிழ், நாட்டுப்புறக் கலைகள் பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மேற்கொண்ட பணிகள்
- பழந்தமிழ் நூல்கள் காட்டும் பழந்தமிழர் வாழ்க்கை, கடல் வணிகம், முத்துக் குளித்தல், மற்றும் பல தொழில் நுட்பங்கள் குறித்து 20 காட்சிக் குறும்படங்கள் (Visual Episodes) உருவாக்கம்
- தமிழின் பன்மை பற்றிய பன்முக ஆய்வுத் திட்டத்தில் மரபு வழித் தமிழ்ச் செய்யுள் படிக்கும் மரபினை மீட்டெடுக்கும் முயற்சியாக பழந்தமிழிப் பாக்கள் மரபுவழி படித்தல்,தொல்காப்பியம் மற்றும் பத்துப்பாட்டு முற்றோதல் ஆகிய குறுவட்டுகள் தயாரிப்பு.
- பல்கலைக்கழக, கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செய்யுளை மரபுவழிப் படிக்கும் பயிற்சியளிப்பு
- பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை (முதல்வர் கருணாநிதி அவர்கள் தலைமை) மற்றும் பண்டைக் காலத் தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும் (மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை) மாநாடுகளின் ஒருங்கிணைப்பு
- தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் (10 -28 நாட்கள் வரை)தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களிலும் , குறிப்பாக, தமிழ், இசை,நாடகத் துறை, திரைப்படக் கல்லூரி மற்றும் கவின்கலைக் கல்லூரிகளில் நடத்தப்பட்டன.
- தமிழ்தாத்தா உ.வே.சா. பிறந்த நாளை ஒட்டிய சங்க இலக்கிய வார கொண்டாட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஒருங்கிணைந்து 115 ஊர்களில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட சங்க இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒருங்கிணைத்து நடத்துதல்.