under review

அம்பை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "{{first review completed}}alt=அம்பை|thumb|அம்பை|link=https://littamilpedia.org/index.php/File:Ambai.jpeg{{Read English|Name of target article=Ambai|Title of target article=Ambai}} '''அம்பை ('''1944-) அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்...")
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(50 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
{{first review completed}}[[File:Ambai.jpeg|alt=அம்பை|thumb|அம்பை|link=https://littamilpedia.org/index.php/File:Ambai.jpeg]]{{Read English|Name of target article=Ambai|Title of target article=Ambai}}
[[File:அம்பை2.webp|thumb|அம்பை]]
[[File:Ambai.jpeg|alt=அம்பை|thumb|அம்பை|]]
[[File:Mahasweta-devi-with-Ambai-1996-Katha-Seminar-Delhi.jpg|thumb|அம்பை மகாஸ்வேதாதேவியுடன்]]
{{Read English|Name of target article=Ambai|Title of target article=Ambai}}


'''அம்பை ('''1944-) அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல் ஆய்வாளர். ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
அம்பை (நவம்பர் 17, 1944) அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல் ஆய்வாளர். ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்.  
[[File:அம்பை இயல் விருது.jpg|thumb|அம்பை இயல் விருது]]
==பிறப்பு, இளமை==
==பிறப்பு, இளமை==
அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. 1944-இல் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.  பெங்களூரில் வளர்ந்தவர். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை (B.A.) பட்டம் பெற்றார். வரலாற்றில் முதுகலை (M.A.) பட்டம் பெற்றார்.
அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. கோயம்புத்தூரில் நவம்பர் 17, 1944 அன்று பிறந்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலையும் , வரலாற்றில் முதுகலைப் பட்டமும் டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கன் ஸ்டடீசில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியும், கன்னடமும் அறிந்தவர்
[[File:Ambai Pictures Tamil Writers Women Authors India 1.jpg|thumb|அம்பை சிறுமியாக(நன்றி சொல்வனம்)]]
==தனி வாழ்க்கை==
==தனி வாழ்க்கை==
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (அமெரிக்கவியல்) பெற்றார். பிறகு தமிழகத்தில் பள்ளி ஆசிரியராகவும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணி புரிந்தார்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியராகவும், டெல்லியில் இரண்டு ஆண்டுகள் கல்லூரி விரிவுரையாளராகவும் பணி புரிந்தார். 1976-ல் ஆவணப்பட இயக்குனர் விஷ்ணு மாத்தூரை திருமணம் செய்து கொண்டார்.  
 
[[File:அம்பை4.webp|thumb|அம்பை]]
1976-இல் ஆவணப்பட இயக்குனர் விஷ்ணு மாத்துரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டார்.
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
அம்பையின் முதல் படைப்பு நந்திமலைச்சாரலிலே (1960) என்ற நாவல். இது சிறுவர்களுக்கான துப்பறியும் சாகச நாவல். குழந்தைகள் பத்திரிகையான "கண்ணன்" பத்திரிகையில் வெளியானது. பிறகு [https://littamilpedia.org/index.php/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D ஆனந்தவிகடன்] பத்திரிகையில் சில சிறுகதைகளை எழுதினார். அம்பையின் இரண்டாவது நாவலான அந்திமாலை கலைமகள் நாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. இந்தச் சிறுகதைகளும் அந்திமாலை நாவலும் அன்று ஆணுக்கு உதவியாக இருப்பவளே லட்சியப் பெண் என்ற பிம்பத்தை ஒட்டியே அமைந்திருந்தன என்று அம்பை குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு 1967-இல் [https://littamilpedia.org/index.php/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF கணையாழி] பத்திரிகையில் வெளியான [https://archive.org/details/orr-11902_Siragugal-Muriyum சிறகுகள் முறியும்] என்ற சிறுகதையே அவரது முதல் சிறுகதையாகக் அவரால் முன்வைக்கப்படுகிறது
அம்பை அப்பெயரைச் சூட்டிக்கொண்டதைப்பற்றி ’அமுதசுரபி’ 2013 தீபாவளி மலரில் ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார். "லக்ஷ்மி என்னும் புனைபெயரைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் வெள்ளிக்கிழமை பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் லக்ஷ்மி என்றுதான் பெயர் சூட்டுவார்கள். 'தேவன்’ எழுதிய பார்வதியின் சங்கல்பம் என்னும் நாவலில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாகிய பார்வதி 'அம்பை’ என்ற பெயரில்தான் எழுத ஆரம்பிப்பாள் என்பதாலும் மற்றும் மகாபாரத அம்பையின் ஆணுமற்ற பெண்ணுமற்ற ஆண் பெண் இரண்டுமான பால் விளக்கமற்ற தன்மையை விரும்பியதால் அப்பெயரையே தனக்குச் சூட்டிக்கொள்ள முடிவெடுத்தேன்"<ref>[https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88 இந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ]</ref>


அம்பையின் சிறுகதைகள் அனேகமாக பெண்களின் பார்வையிலிருந்து எழுதப்படுபவை. ஆனால் அவை பிரச்சாரக் கதைகள் அல்ல. பாரம்பரியமும் பண்பாடும் பெண்களை காலம் காலமாக எப்படி நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கி வந்திருக்கின்றன என்பதை மிக நுட்பமாக சுட்டிக் காட்டுகிறார். அவர் கதைகளில் வரும் நாயகிகள் இதைப் புரிந்து கொள்கிறார்கள். கையாலாகாத அழுகை இல்லை. வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்கிறார்கள். பெண்களின் வாழ்க்கை ஏன் இப்படி சிக்கலாக இருக்கின்றன என்பதைப் பற்றி வாசகர்களை - பெண், ஆண் வாசகர்கள் அனைவரையும் - சிந்திக்க வைக்கிறார்.
அம்பையின் முதல் படைப்பு நந்திமலைச்சாரலிலே (1960) என்ற சிறுவர்களுக்கான துப்பறியும் சாகச நாவல். குழந்தைகள் பத்திரிகையான "கண்ணன்" பத்திரிகையில் வெளியானது. பிறகு [[ஆனந்த விகடன்]] பத்திரிகையில் சில சிறுகதைகளை எழுதினார். அம்பையின் இரண்டாவது நாவலான அந்திமாலை கலைமகள் நாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. இந்தச் சிறுகதைகளும், அந்திமாலை நாவலும் அன்று ஆணுக்கு உதவியாக இருப்பவளே லட்சியப் பெண் என்ற பிம்பத்தை ஒட்டியே அமைந்திருந்தன என்று அம்பை குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு 1967-ல் [[கணையாழி]] பத்திரிகையில் வெளியான சிறகுகள் முறியும்<ref>[https://archive.org/details/orr-11902_Siragugal-Muriyum சிறகுகள் முறியும், அம்பை, ஆர்கைவ்.ஆர்க்]</ref> என்ற சிறுகதையே அவரது முதல் சிறுகதையாக அவரால் முன்வைக்கப்படுகிறது


அம்பையின் பல சிறுகதைகளை [https://archive.org/search.php?query=subject%3A%22%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%22 ஆர்க்கைவ்] தளத்திலும் [https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88 அழியாச்சுடர்கள்] தளத்திலும் படிக்கலாம்.
அம்பையின் சிறுகதைகள் அனேகமாக பெண்களின் பார்வையிலிருந்து எழுதப்படுபவை. ஆனால் அவை பிரச்சாரக் கதைகள் அல்ல. பாரம்பரியமும், பண்பாடும் பெண்களை காலம் காலமாக எப்படி நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கி வந்திருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார். பெண்களின் வாழ்க்கையில் உள்ள சமூக ஆதிக்கம், கருத்தியல் ஆதிக்கத்தையே முதன்மை பேசுபொருளாக அம்பை கொண்டிருக்கிறார். தொடக்ககாலக் கதைகளில் மார்க்சியச் செல்வாக்கும் உண்டு. அண்மையில் துப்பறியும் கதைகளின் பாணியிலும் கதைகளை எழுதியிருக்கிறார்.  
[[File:Ambai Writers Authors Tamil Awards Fiction.webp|thumb|அம்பை வாசகர் சந்திப்பு]]
==ஆய்வுகள்==
==ஆய்வுகள்==
சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
அம்பையின் ஆய்வுகள் இரண்டு களங்களைச் சார்ந்தவை . சமூகவியல், இலக்கியம். அம்பை சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு சமூகவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலையை பரிவுடன் ஆராய்பவை அம்பையின் கட்டுரைகள். பெண் இசைக்கலைஞர்கள், பெண் நடனக்கலைஞர்கள் பற்றிய அவருடைய ஆய்வுப்பதிவுகள் முக்கியமானவை.
 
அம்பை தமிழிலக்கியத்தின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்கள் பற்றி விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிருடன் இருந்த எண்பதுகளில் அவர்களில் பலரை நேரில் கண்டு பேசி பதிவுசெய்துள்ளார். அந்த ஆய்வுகள் தமிழில் பெண் எழுத்து தொடங்கிய வரலாற்றைக் காட்டும் முக்கியமான ஆவணப்பதிவுகள்.
==சமூகப் பணிகள்==
==சமூகப் பணிகள்==
[https://www.sparrowonline.org/ SPARROW] (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவியர்களில் ஒருவர். இன்றும் அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு பெண்களின் ஒலிப்பதிவுகள், வாய்மொழி வரலாறுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.
SPARROW (Sound and Picture Archives for Research on Women)<ref>[https://www.sparrowonline.org/ sparrowonline.org]</ref> என்ற அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர். அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு பெண்களின் ஒலிப்பதிவுகள், வாய்மொழி வரலாறுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.
 
== திரைப்படங்கள் ==
*'தங்கராஜ் எங்கே' சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
*'முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையை திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.
==விருதுகள்==
*2008 க்கான கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது
*2021-க்கான சாகித்ய அகாடெமி விருது(சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்புக்காக).
*2023 டாட்டா வாழ்நாள் சாதனையாளர் விருது
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
அம்பையின் சிறகதைகளைப் பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம். வாழ்வின்மீது கவியும் துன்பங்களையும் தன்மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம். நுட்பமும் கலை அழகும் கொண்டவர் என்றாலும் வாழ்வு பற்றிய இவரது அறிவுப்பூர்வமான புரிதல்கள் அனுபவங்களை வழிநடத்துவதில் கதைகளின் உணர்வு நிலைகள் பாதிக்கப்படுகின்றன என்று சுந்தரராமசாமி குறிப்பிடுகிறார்.
அம்பையை இந்திய இலக்கியத்தில் வங்காளப் படைப்பாளியான மகாஸ்வேதா தேவியுடன் ஒப்பிட முடியும். சமூகக்கோபமும் தனிப்பட்ட உணர்வுகளும் இணைந்து கலையாகும்போது சற்றே தூக்கலான குரல் இக்கதைகளில் உருவாகிறது "அம்பையின் சிறுகதைகளை பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம். வாழ்வின்மீது கவியும் துன்பங்களை தன்மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம். நுட்பமும் கலை அழகும் கொண்டவர் என்றாலும் வாழ்வு பற்றிய இவரது அறிவுப்பூர்வமான புரிதல்கள் அனுபவங்களை வழிநடத்துவதில் கதைகளின் உணர்வு நிலைகள் பாதிக்கப்படுகின்றன" என்று சுந்தரராமசாமி குறிப்பிடுகிறார்.


வெகுஜனப் பெண்களுள் ஒருவராக இந்தச் சமூக அமைப்பை அணுகுவது, இவற்றிலிருந்து விடுபட்டவராக இந்தப் பிரச்சினைகளுக்குள் குறுக்கீடுசெய்வது என அம்பையின் மொத்தச் சிறுகதைகளையும் இருவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இந்த இரு தன்மைகளும் அவர் கதைகளுக்குள் இருக்கின்றன. என்று விமர்சகர் மண்குதிரை குறிப்பிடுகிறார் [https://www.hindutamil.in/news/supplements/penn-indru/131161-02.html *]
வெகுஜனப் பெண்களுள் ஒருவராக இந்தச் சமூக அமைப்பை அணுகுவது, இவற்றிலிருந்து விடுபட்டவராக இந்தப் பிரச்சினைகளுக்குள் குறுக்கீடுசெய்வது என அம்பையின் மொத்தச் சிறுகதைகளையும் இருவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இந்த இரு தன்மைகளும் அவர் கதைகளுக்குள் இருக்கின்றன என்று விமர்சகர் மண்குதிரை குறிப்பிடுகிறார் [https://www.hindutamil.in/news/supplements/penn-indru/131161-02.html *]
[[File:அம்பை 7.jpg|thumb|அம்பை7]]
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அம்மா ஒரு கொலை செய்தாள், கறுப்பு குதிரை சதுக்கம், ஆகிய சிறுகதைகளை தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில்<ref>[https://www.jeyamohan.in/214/ தமிழ்ச் சிறுகதை – திறனாய்வாளன் பட்டியல்]</ref> விமர்சகர் ஜெயமோகன் சேர்க்கிறார். விமர்சகர் [[எஸ். ராமகிருஷ்ணன்]] அம்மா ஒரு கொலை செய்தாள், காட்டில் ஒரு மான் ஆகிய சிறுகதைகளை தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்<ref>[https://www.sramakrishnan.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ எஸ். ராமகிருஷ்ணன் - நூறு சிறந்த சிறுகதைகள் பரிந்துரை]</ref> பட்டியலில் சேர்க்கிறார்.


வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அம்மா ஒரு கொலை செய்தாள், கறுப்பு குதிரை சதுக்கம், ஆகிய சிறுகதைகளை [https://www.jeyamohan.in/214 தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில்] விமர்சகர் ஜெயமோகன் சேர்க்கிறார். விமர்சகர் [https://littamilpedia.org/index.php/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D எஸ். ராமகிருஷ்ணன்] அம்மா ஒரு கொலை செய்தாள், காட்டில் ஒரு மான் ஆகிய சிறுகதைகளை [https://www.sramakrishnan.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்] பட்டியலில் சேர்க்கிறார்.
பெண்கல்வி, பெண் விடுதலைக்கான குரல்கள் தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலம் முதலே இருந்து வருகின்றன. வை.மு.கோதைநாயகி அம்மாள் முதல் தொடர்ச்சியாக பெண் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். அவர்களில் ஆர்.சூடாமணி முக்கியமானவர். அம்பை, ஆர்.சூடாமணியை வாழ்க்கை குறித்தும் இலக்கியம் குறித்தும் திறந்த மனதுடன் உரையாடும் நல்ல தோழியாக கருதுபவர். (மனதுக்கினியவள், அம்பை)<ref>[https://solvanam.com/2019/04/26/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/ மனத்துக்கினியவள், அம்பை]</ref>. ஆனால் பெண்ணியக் கொள்கைகள் பற்றிய புரிதலுடன், உலகளாவிய வரலாற்று அணுகுமுறையுடன் பெண்விடுதலை பற்றி தமிழில் பேசியவர் அம்பை. களச்செயல்பாட்டளராகவும், பெண்விடுதலைக்காகப் பணியாற்றியவர். அவருடைய படைப்புகளில் பெண்மைய நோக்கு ஒரு முன்சட்டகமாக அமைந்து கலைக்குறைபாட்டை உருவாக்குகிறது என்னும் விமர்சனம் விமர்சகர்களிடம் இருந்தாலும் அவருடைய படைப்புகள் ஆழமான உரையாடலை உருவாக்குபவை, அறிவார்ந்த நெருக்கடிகளை அளிப்பவை என்பதனால் அம்பை தமிழின் முக்கியமான முன்னோடி இலக்கியவாதியாகக் கருதப்படுகிறார்.


பெண்கல்வி, பெண் விடுதலைக்கான குரல்கள் தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலம் முதலே இருந்து வருகின்றன. வை.மு.கோதைநாயகி அம்மாள் முதல் தொடர்ச்சியாக பெண் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். அவர்களில் ஆர்.சூடாமணி முக்கியமானவர். அம்பை ஆர்.சூடாமணியை தன் இலக்கிய வழிகாட்டியாகவும், தன் இலக்கியத்தோழியாகவும் கருதுபவர். ([https://solvanam.com/2019/04/26/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/ மனதுக்கினியவள்,அம்பை])ஆனால் பெண்ணியக் கொள்கைகள் பற்றிய புரிதலுடன், உலகளாவிய வரலாற்று அணுகுமுறையுடன் பெண்விடுதலை பற்றி தமிழில் பேசியவர் அம்பை. களச்செயல்பாட்டளராகவும் பெண்விடுதலைக்காகப் பணியாற்றியவர். அவருடைய படைப்புக்களில் பெண்மைய நோக்கு ஒரு முன்சட்டகமாக அமைந்து கலைக்குறைபாட்டை உருவாக்குகிறது என்னும் விமர்சனம் விமர்ச்கர்களிடம் இருந்தாலும் அவருடைய படைப்புக்கள் ஆழமான உரையாடலை உருவாக்குபவை, அறிவார்ந்த நெருக்கடிகளை அளிப்பவை என்பதனால் அம்பை தமிழின் முக்கியமான முன்னோடி இலக்கியவாதியாகக் கருதப்படுகிறார்.
அம்பை தன் பார்வையை இவ்வாறாக முன்வைக்கிறார் "என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ’உண்மைகளை’ பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த ’உண்மை’யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம்." (இயல்விருது ஏற்புவிழா<ref>[https://solvanam.com/2019/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88/ தமிழ் இலக்கியத் தோட்டம் விருதேற்பு உரை, அம்பை, சொல்வனம்.காம்]</ref>)
==திரைப்படங்கள்==
*‘தங்கராஜ் எங்கே‘ சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
*‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.
==விருதுகள்==
*கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது (2008)
*2021-க்கான சாகித்ய அகாடெமி விருது அம்பையின் '''சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை''' சிறுகதைத் தொகுப்புக்காக அளிக்கப்பட்டது.
==படைப்புகள்==
==படைப்புகள்==
 
[[File:51hApPKIM3L.jpg|thumb|அம்பை முழுத்தொகுதி]]
====== நாவல்கள் ======
====== நாவல்கள் ======
*அந்திமாலை (1966)
*அந்திமாலை (1966)
Line 54: Line 63:
*சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு)
*சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு)
*செல்லம்மாள்-நினைவுக் குறிப்புகள் 1993
*செல்லம்மாள்-நினைவுக் குறிப்புகள் 1993
======ஆய்வு நூல்======
======ஆய்வு நூல்கள்======
======உடலெனும் வெளி-பெண்ணும் மொழியும் வெளிப்பாடும்======
* உடலெனும் வெளி-பெண்ணும் மொழியும் வெளிப்பாடும்
 
* The Face behind the Mask: Women in Tamil Literature
* The Face behind the Mask: Women in Tamil Literature
* Seven Seas & Seven Mountains series: (2 volumes)
* Seven Seas & Seven Mountains series: (2 volumes)
* Volume 1: The Singer and the Song – Conversations with Women Musicians
* Volume 1: The Singer and the Song – Conversations with Women Musicians
* Volume 2: Mirrors and Gestures – Conversations with Women Dancers (ed.) The Unhurried City – Writings on Chennai.
* Volume 2: Mirrors and Gestures – Conversations with Women Dancers (ed.)  
 
*The Unhurried City – Writings on Chennai.
======மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்======
======மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்======
 
* A Purple Sea (லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம்)
* A Purple Sea
* A Deer In the Forest ([[லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம்]])
* A DeerIn the Forest ([https://littamilpedia.org/index.php/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம்)]
* Fish in a Dwindling Lake (லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம்)
* Fish in a Dwindling Lake
* A Night with A Black Spider Stories (Aniruddhan Vasudevan)
* A Night with A Black Spider Stories  (Aniruddhan Vasudevan)
* A Meeting on the Andheri Overbridge.
* A Meeting on the Andheri Overbridge.
====== மொழியாக்க படைப்புகள் ======
* ஸைபீரியப் பனியில் நடனக் காலனியுடன்-ஸான்ட்ரா கால்னியடே
* அமைதியின் நறுமணம்- இரோம் ஷர்மிளா
== உசாத்துணை ==
*அம்பை - [https://solvanam.com/2019/04 சொல்வனம் சிறப்பிதழ்]
*[https://tamil.indianexpress.com/literature/sahitya-akademi-award-announced-to-writer-ambai-390419/ Sahitya Akademi award announced to writer Ambai - எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு | Indian Express Tamil]
*[http://tamilliterarygarden.com/awards/ambai Tamil Literary Garden, Award Recipients for 2008]
*[https://solvanam.com/2019/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88/ அம்பை இயல்விருது ஏற்புரை]
*[https://www.hindutamil.in/news/supplements/penn-indru/131161-02.html பாதையற்ற நிலம் 02: ஒழுக்க விதிகள் மீதான குறுக்கீடு, மண்குதிரை, ஏப்ரல் 2018]
*[https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/ அம்பை | அழியாச் சுடர்கள்]
*[https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88 பசுபதிவுகள்: அம்பை]
*[https://www.aanthaireporter.com/some-sp-report-about-sahitya-akademi-award-announced-for-writer-ambai/ சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் அம்பை!- சில சிறப்புத் தகவல்கள்]
== அடிக்குறிப்புகள் ==
<references />


மொழியாக்கங்கள்
{{Finalised}}
 
[[Category:Tamil Content]]
ஸைபீரியப் பனியில் நடனக் காலனியுடன்-ஸான்ட்ரா கால்னியடே
[[Category:Spc]]
 
[[Category:எழுத்தாளர்கள்]]
அமைதியின் நறுமணம்- இரோம் ஷர்மிலா து (2021)
[[Category:நாவலாசிரியர்கள்]]
 
[[Category:இலக்கிய விமர்சகர்கள்]]
==உசாத்துணை==
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
*அம்பை - [https://solvanam.com/2019/04 சொல்வனம் சிறப்பிதழ்]
*https://tamil.indianexpress.com/literature/sahitya-akademi-award-announced-to-writer-ambai-390419/
*http://tamilliterarygarden.com/awards/ambai
*https://www.hindutamil.in/news/supplements/penn-indru/131161-02.html<!--This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section-->

Latest revision as of 07:22, 24 February 2024

அம்பை
அம்பை
அம்பை மகாஸ்வேதாதேவியுடன்

To read the article in English: Ambai. ‎


அம்பை (நவம்பர் 17, 1944) அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல் ஆய்வாளர். ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்.

அம்பை இயல் விருது

பிறப்பு, இளமை

அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. கோயம்புத்தூரில் நவம்பர் 17, 1944 அன்று பிறந்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலையும் , வரலாற்றில் முதுகலைப் பட்டமும் டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கன் ஸ்டடீசில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியும், கன்னடமும் அறிந்தவர்

அம்பை சிறுமியாக(நன்றி சொல்வனம்)

தனி வாழ்க்கை

தமிழகத்தில் பள்ளி ஆசிரியராகவும், டெல்லியில் இரண்டு ஆண்டுகள் கல்லூரி விரிவுரையாளராகவும் பணி புரிந்தார். 1976-ல் ஆவணப்பட இயக்குனர் விஷ்ணு மாத்தூரை திருமணம் செய்து கொண்டார்.

அம்பை

இலக்கிய வாழ்க்கை

அம்பை அப்பெயரைச் சூட்டிக்கொண்டதைப்பற்றி ’அமுதசுரபி’ 2013 தீபாவளி மலரில் ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார். "லக்ஷ்மி என்னும் புனைபெயரைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் வெள்ளிக்கிழமை பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் லக்ஷ்மி என்றுதான் பெயர் சூட்டுவார்கள். 'தேவன்’ எழுதிய பார்வதியின் சங்கல்பம் என்னும் நாவலில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாகிய பார்வதி 'அம்பை’ என்ற பெயரில்தான் எழுத ஆரம்பிப்பாள் என்பதாலும் மற்றும் மகாபாரத அம்பையின் ஆணுமற்ற பெண்ணுமற்ற ஆண் பெண் இரண்டுமான பால் விளக்கமற்ற தன்மையை விரும்பியதால் அப்பெயரையே தனக்குச் சூட்டிக்கொள்ள முடிவெடுத்தேன்"[1]

அம்பையின் முதல் படைப்பு நந்திமலைச்சாரலிலே (1960) என்ற சிறுவர்களுக்கான துப்பறியும் சாகச நாவல். குழந்தைகள் பத்திரிகையான "கண்ணன்" பத்திரிகையில் வெளியானது. பிறகு ஆனந்த விகடன் பத்திரிகையில் சில சிறுகதைகளை எழுதினார். அம்பையின் இரண்டாவது நாவலான அந்திமாலை கலைமகள் நாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. இந்தச் சிறுகதைகளும், அந்திமாலை நாவலும் அன்று ஆணுக்கு உதவியாக இருப்பவளே லட்சியப் பெண் என்ற பிம்பத்தை ஒட்டியே அமைந்திருந்தன என்று அம்பை குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு 1967-ல் கணையாழி பத்திரிகையில் வெளியான சிறகுகள் முறியும்[2] என்ற சிறுகதையே அவரது முதல் சிறுகதையாக அவரால் முன்வைக்கப்படுகிறது

அம்பையின் சிறுகதைகள் அனேகமாக பெண்களின் பார்வையிலிருந்து எழுதப்படுபவை. ஆனால் அவை பிரச்சாரக் கதைகள் அல்ல. பாரம்பரியமும், பண்பாடும் பெண்களை காலம் காலமாக எப்படி நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கி வந்திருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார். பெண்களின் வாழ்க்கையில் உள்ள சமூக ஆதிக்கம், கருத்தியல் ஆதிக்கத்தையே முதன்மை பேசுபொருளாக அம்பை கொண்டிருக்கிறார். தொடக்ககாலக் கதைகளில் மார்க்சியச் செல்வாக்கும் உண்டு. அண்மையில் துப்பறியும் கதைகளின் பாணியிலும் கதைகளை எழுதியிருக்கிறார்.

அம்பை வாசகர் சந்திப்பு

ஆய்வுகள்

அம்பையின் ஆய்வுகள் இரண்டு களங்களைச் சார்ந்தவை . சமூகவியல், இலக்கியம். அம்பை சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு சமூகவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலையை பரிவுடன் ஆராய்பவை அம்பையின் கட்டுரைகள். பெண் இசைக்கலைஞர்கள், பெண் நடனக்கலைஞர்கள் பற்றிய அவருடைய ஆய்வுப்பதிவுகள் முக்கியமானவை.

அம்பை தமிழிலக்கியத்தின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்கள் பற்றி விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிருடன் இருந்த எண்பதுகளில் அவர்களில் பலரை நேரில் கண்டு பேசி பதிவுசெய்துள்ளார். அந்த ஆய்வுகள் தமிழில் பெண் எழுத்து தொடங்கிய வரலாற்றைக் காட்டும் முக்கியமான ஆவணப்பதிவுகள்.

சமூகப் பணிகள்

SPARROW (Sound and Picture Archives for Research on Women)[3] என்ற அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர். அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு பெண்களின் ஒலிப்பதிவுகள், வாய்மொழி வரலாறுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.

திரைப்படங்கள்

  • 'தங்கராஜ் எங்கே' சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
  • 'முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையை திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.

விருதுகள்

  • 2008 க்கான கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது
  • 2021-க்கான சாகித்ய அகாடெமி விருது(சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்புக்காக).
  • 2023 டாட்டா வாழ்நாள் சாதனையாளர் விருது

இலக்கிய இடம்

அம்பையை இந்திய இலக்கியத்தில் வங்காளப் படைப்பாளியான மகாஸ்வேதா தேவியுடன் ஒப்பிட முடியும். சமூகக்கோபமும் தனிப்பட்ட உணர்வுகளும் இணைந்து கலையாகும்போது சற்றே தூக்கலான குரல் இக்கதைகளில் உருவாகிறது "அம்பையின் சிறுகதைகளை பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம். வாழ்வின்மீது கவியும் துன்பங்களை தன்மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம். நுட்பமும் கலை அழகும் கொண்டவர் என்றாலும் வாழ்வு பற்றிய இவரது அறிவுப்பூர்வமான புரிதல்கள் அனுபவங்களை வழிநடத்துவதில் கதைகளின் உணர்வு நிலைகள் பாதிக்கப்படுகின்றன" என்று சுந்தரராமசாமி குறிப்பிடுகிறார்.

வெகுஜனப் பெண்களுள் ஒருவராக இந்தச் சமூக அமைப்பை அணுகுவது, இவற்றிலிருந்து விடுபட்டவராக இந்தப் பிரச்சினைகளுக்குள் குறுக்கீடுசெய்வது என அம்பையின் மொத்தச் சிறுகதைகளையும் இருவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இந்த இரு தன்மைகளும் அவர் கதைகளுக்குள் இருக்கின்றன என்று விமர்சகர் மண்குதிரை குறிப்பிடுகிறார் *

அம்பை7

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அம்மா ஒரு கொலை செய்தாள், கறுப்பு குதிரை சதுக்கம், ஆகிய சிறுகதைகளை தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில்[4] விமர்சகர் ஜெயமோகன் சேர்க்கிறார். விமர்சகர் எஸ். ராமகிருஷ்ணன் அம்மா ஒரு கொலை செய்தாள், காட்டில் ஒரு மான் ஆகிய சிறுகதைகளை தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்[5] பட்டியலில் சேர்க்கிறார்.

பெண்கல்வி, பெண் விடுதலைக்கான குரல்கள் தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலம் முதலே இருந்து வருகின்றன. வை.மு.கோதைநாயகி அம்மாள் முதல் தொடர்ச்சியாக பெண் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். அவர்களில் ஆர்.சூடாமணி முக்கியமானவர். அம்பை, ஆர்.சூடாமணியை வாழ்க்கை குறித்தும் இலக்கியம் குறித்தும் திறந்த மனதுடன் உரையாடும் நல்ல தோழியாக கருதுபவர். (மனதுக்கினியவள், அம்பை)[6]. ஆனால் பெண்ணியக் கொள்கைகள் பற்றிய புரிதலுடன், உலகளாவிய வரலாற்று அணுகுமுறையுடன் பெண்விடுதலை பற்றி தமிழில் பேசியவர் அம்பை. களச்செயல்பாட்டளராகவும், பெண்விடுதலைக்காகப் பணியாற்றியவர். அவருடைய படைப்புகளில் பெண்மைய நோக்கு ஒரு முன்சட்டகமாக அமைந்து கலைக்குறைபாட்டை உருவாக்குகிறது என்னும் விமர்சனம் விமர்சகர்களிடம் இருந்தாலும் அவருடைய படைப்புகள் ஆழமான உரையாடலை உருவாக்குபவை, அறிவார்ந்த நெருக்கடிகளை அளிப்பவை என்பதனால் அம்பை தமிழின் முக்கியமான முன்னோடி இலக்கியவாதியாகக் கருதப்படுகிறார்.

அம்பை தன் பார்வையை இவ்வாறாக முன்வைக்கிறார் "என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ’உண்மைகளை’ பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த ’உண்மை’யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம்." (இயல்விருது ஏற்புவிழா[7])

படைப்புகள்

அம்பை முழுத்தொகுதி
நாவல்கள்
  • அந்திமாலை (1966)
சிறுகதைத் தொகுப்புகள்
  • சிறகுகள் முறியும் (1976)
  • அம்மா ஒரு கொலை செய்தாள்
  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988)
  • காட்டில் ஒரு மான் (2000)
  • சக்கர நாற்காலி
  • ஸஞ்சாரி
  • வற்றும் ஏரியின் மீன்கள் (2007)
  • ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்-சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள்
  • ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
  • சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சாகித்ய அகாடெமி விருது)
சிறார் நூல்கள்
  • நந்திமலைச்சாரலிலே (1960)
தொகுப்புகள்
  • பயணப்படாத பாதைகள் (ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு)
  • சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு)
  • செல்லம்மாள்-நினைவுக் குறிப்புகள் 1993
ஆய்வு நூல்கள்
  • உடலெனும் வெளி-பெண்ணும் மொழியும் வெளிப்பாடும்
  • The Face behind the Mask: Women in Tamil Literature
  • Seven Seas & Seven Mountains series: (2 volumes)
  • Volume 1: The Singer and the Song – Conversations with Women Musicians
  • Volume 2: Mirrors and Gestures – Conversations with Women Dancers (ed.)
  • The Unhurried City – Writings on Chennai.
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • A Purple Sea (லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம்)
  • A Deer In the Forest (லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம்)
  • Fish in a Dwindling Lake (லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம்)
  • A Night with A Black Spider Stories (Aniruddhan Vasudevan)
  • A Meeting on the Andheri Overbridge.
மொழியாக்க படைப்புகள்
  • ஸைபீரியப் பனியில் நடனக் காலனியுடன்-ஸான்ட்ரா கால்னியடே
  • அமைதியின் நறுமணம்- இரோம் ஷர்மிளா

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page