நிர்மலா சுரேஷ்
நிர்மலா சுரேஷ் (ஜூன் 18, 1950 - மே 27, 2021) கவிஞர், எழுத்தாளர். பேச்சாளர். மொழிபெயர்ப்பாளர். பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தார். கனடாவில் மொழிபெயர்ப்பாளராகவும், மக்கள் தொடர்பு அலுவலராகவும் பணியாற்றினார். திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணியின் மாநிலத் துணைத் தலைவராகப் பணியாற்றினார். தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
நிர்மலா சுரேஷ், ஜூன் 18, 1950 அன்று, தஞ்சாவூரீல், இருதயராஜ்-ரெஜினா இணையருக்குப் பிறந்தார். திருச்சியில் பள்ளிக் கல்வி பயின்றார். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம், முதுகலைத் தமிழ் படித்துப் பட்டம் பெற்றார். கல்வியியல் பயின்று பி.எட். பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலையில் ‘ஹைக்கூக் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
நிர்மலா சுரேஷ், செயிண்ட் மைக்கேல் அகாடமி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தார். கனடா குடியுரிமை பெற்று அங்கு மொழிபெயர்ப்பாளராகவும், மக்கள் தொடர்பு அலுவலராகவும் பணியாற்றினார். கணவர், பில்பெர்ட் ஜோசப் சுரேஷ். மகன்: லம்பெர்ட் ரிஷி; மகள்: மதில்டா சதுரா.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.