குமாரசாமிப் பிள்ளை
From Tamil Wiki
குமாரசாமிப் பிள்ளை (19-20ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கைத் யாழ்ப்பாணம் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்றான சுன்னாகத்தில் 19-20ம் நூற்றாண்டில் குமாரசாமிப் பிள்ளை பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். ஊசல் மற்றும் எச்சரிக்கை ஆகிய சிற்றிலக்கிய வகைகளில் துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல், துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை ஆகிய நூல்களைப் பாடினார்.
நூல்கள் பட்டியல்
ஊஞ்சல்
- துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல்
எச்சரிக்கை
- துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- https://noolaham.net/project/10/963/963.html
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.