being created

வெண்பாப் பாட்டியல்

From Tamil Wiki

வெண்பாப் பாட்டியல்(வச்சணந்திமாலை) ஒரு பாட்டியல் நூல். இதை இயற்றியவர் குணவீர பண்டிதர். இதன் காலம் பொ.யு. 1-ஆம் நூற்றாண்டு.

ஆசிரியர்

வெண்பாப் பாட்டியலை இயற்றியவர் குணவீர பண்டிதர். இவரே நேமிநாதம் என்னும் இலக்கண நூலையும் இயற்றியவர். குணவீர பண்டிதரின் ஆசிரியரான வச்சணந்தி (வஜ்ர நந்தி) என்பாரின் பெயரைத் தழுவியே இந்நூலுக்கு வச்சணந்திமாலை என்னும் பெயர் ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது. . இந்நூலின் பாயிரவுரை, இந்நூலுக்கு முதல் நூல் இன்று முழுமையாகக் கிடைக்காத இந்திரகாளியம் எனக் குறிப்பிடுகின்றது. இது சிலப்பதிகார அடியார்க்குநல்லார் உரையில் கூறப்படுகின்ற யமளேந்திரர் செய்த இசைத்தமிழ் நூலாகிய இந்திரகாளியத்தின் வேறானது என்பர்.  வெண்பாப்பட்டியலின் காலத்தை அறியமுடியவில்லை. எனினும் இதன் உரை இந்நூல் திரிபுவனத்தேவன் என்னும் அரசன் காலத்தில் எழுந்தது எனக் கூறுகின்றது.









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.