தொல்காப்பியம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
தொல்காப்பியம் தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல். இதனை இயற்றியவர் தொல்காப்பியர். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களையும் 1610 நூற்பாக்களையும் உடையது. தொல்காப்பியர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்குகின்றார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வியலை மிகவும் தெளிவாக வரையறை செய்து விளக்குகின்றார். இவ்வகையான ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை எனத் தமிழ் அறிந்த உலக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
பதிப்பு
- மகாலிங்கையர் மழலை, தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை, 1848.
- சி.வை.இ தாமோதரம் பிள்ளை, தொல்காப்பியம்-சொல்லதிகாரம் - சேனாவரையர் உரை, 1868.
- சாமுவேல் பிள்ளை, தொல்காப்பியம் - நன்னூல் இரண்டையும் ஒத்த நூற்பாக்கள் அடிப்படையில் 1858 இல் பதிப்பித்துள்ளார்.
இப்பதிப்புக்களுக்குப் பிறகு பலர் தொல்காப்பியத்தை விரிவாக ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டு இருக்கின்றார்கள். உ.வே. சாமிநாதையர், வ.உ. சிதம்பரனார், ரா. இராக வையங்கார், கா. நமச்சிவாய முதலியார், கா. சுப்பிரமணியபிள்ளை P.S. சுப்பிரமணிய சாஸ்திரி, சி. கணேசையர், ச. சோமசுந்தர பாரதியார் எனப் பலரும் தொல்காப்பியத்தைப் பதிப்பித்துள்ளனர்.
[[Category:Tamil Content]]