ஈழதேவி

From Tamil Wiki
Revision as of 08:22, 7 December 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஈழதேவி (1957-1958) இலங்கையில் இருந்து வெளிவந்த தொடக்ககால இலக்கிய மாத இதழ். இலங்கை கழுத்துறையில் இருது வெளிவந்தது. == வெளியீடு == ஈழதேவி 1957 முதல் வெளிவந்தது. அதன் ஆசிரியர் பண்டிதர் த.சுப்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஈழதேவி (1957-1958) இலங்கையில் இருந்து வெளிவந்த தொடக்ககால இலக்கிய மாத இதழ். இலங்கை கழுத்துறையில் இருது வெளிவந்தது.

வெளியீடு

ஈழதேவி 1957 முதல் வெளிவந்தது. அதன் ஆசிரியர் பண்டிதர் த.சுப்பிரமணியம். நிதி, நிர்வாகம், வெளியீட்டுக்குப் பொறுப்பாக இருந்தவர் நா.பாலசுப்பிரமணியம் (பாலா).

1958 ல் இலங்கையில் நடந்த கலவரத்தையடுத்து உருவான சூழலில் கழுத்துறையில் தொடர்ந்து  ஈழதேவி சஞ்சிகையினை நடத்த முடியாத நிலை உருவானபோது இதழ் நிறுத்தப்பட்டது. ஈழதேவியின் தொடர்ச்சியாகவே கலைச்செல்வி (இதழ்) தொடங்கப்பட்டது.