being created

கார்த்திகை தீப வழிபாடு

From Tamil Wiki
Revision as of 16:09, 6 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தீப வரிசை
கார்த்திகை தீபம், திருவண்ணாமலை

தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வரும் வழிபாடுகளுள் ஒன்று கார்த்திகை தீப வழிபாடு. வழிபாடுகளில் சிறந்ததாக தீப வழிபாடு கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று இது விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது என்றாலும் தமிழ்நாட்டில், திருவண்ணாமலையில், மிகச் சிறப்பாக இவ்விழா நடைபெறுகிறது.

வழிபாட்டின் நோக்கம்

இறை வழிபாடுகளில் சிறந்ததாக தீப வழிபாடு கருதப்படுகிறது. ஜோதி வடிவான இறைவனை தங்கள் இல்லங்களில் விளக்கேற்றி தீப வவிடில் வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட மரபாக உள்ளது. இல்லம் இருள் அகன்று ஒளிவீசுவது போல் வாழ்க்கையின் இருளும் மறைய வேண்டும் என்பதே தீப வழிபாட்டின் நோக்கம்.

மனிதர்களுள் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தேடுவதே தீப வழிபாட்டின் தத்துவமாகும். உடலே கொப்பரை; தவமே எண்ணெய்; அறிவே திரி; அதனால் விளையும் ஞானமே ’தீபம்’ என்ற ஒரு கருத்துமுண்டு.








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.