standardised

மு. செல்லையா

From Tamil Wiki
Revision as of 11:23, 24 November 2022 by Ramya (talk | contribs)

மு. செல்லையா (அக்டோபர் 7, 1906 - டிசம்பர் 9, 1966) ஈழத்து தமிழ்ப்புலவர், ஆசிரியர், ஜோதிடர்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. செல்லையா இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு அருகிலுள்ள அல்வாயூரில் அக்டோபர் 7, 1906-ல் பிறந்தார். பயிற்சிபெற்ற தமிழாசிரியராய் பணியாற்றினார். அல்வாயூர் வித்தியாசாலையை நிறுவினார். ஜோதிடத்தில் தன் ஒன்றுவிட்ட பாட்டனார் க. வேலுச்சாமி ஜோதிடர் போல புகழ்பெற்றார். நாடி பார்ப்பதில் திறனுடையவர். சுகாதார சாஸ்திரங்களைக் கற்றார். சங்கீத ஞானம் கொண்டவர்.

ஆன்மிக வாழ்க்கை

”ஆலயப் பிரவேசம்” இயக்கத்தை எதிர்த்து ”சைவ சமய சமரச சங்கம்” ஆரம்பித்தார். அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார். டிசம்பர் 11, 1966இல் வத்தீஸ்வரர் கல்லூரியில் கூட்டம் ஏற்பாடு செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

மரபுக் கவிதைகள் எழுதினார். 1933-ல் குடல் நோய் வருத்திய காலத்தில் படுக்கையில் இருந்தவாறு கந்தவன முருகனை வேண்டி பாடல்கள் பாடினார். கட்டளைக் கலித்துறையில் அமைந்த அப்பாடல்கள் ’கந்தவனநாதர் காரிகை' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. "ஈழ கேசரி’ வார இதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 'அநுசுயா' என்ற புனைப்பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதினார். இலங்கை வானொலித் துறையினரால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில், இவர் இயற்றிய 'புதிய வண்டுவிடு தூது’ கவிதை முதல் பரிசைப் பெற்றது. வளர்பிறை, குமாரவேள் பதிகம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

மறைவு

மு.செல்லய்யா டிசம்பர் 9, 1966 அன்று காலமானார்

நூல் பட்டியல்

கவிதை
  • புதிய வண்டுவிடு தூது
பிற
  • வளர்பிறை
  • குமாரவேள் பதிகம்
  • கந்தவனநாதர் காரிகை

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.