மயில் இராவணன் கதை
From Tamil Wiki
மயில் ராவணன் கதை தமிழகத்தில் வழக்கில் உள்ள நாட்டார் இராமாயண கதை. இராவணனின் தம்பி பாதாளத்தில் வாழும் மயில் ராவணன் இராம, லட்சுமணனைக் கடத்தி வந்து காளிக்குப் பலிக் கொடுத்ததாகவும், அனுமன் விஸ்வரூபம் கொண்டு அவர்கள் இருவரையும் பாதாள உலகிலிருந்து மீட்டு திரும்பியதாக அமைந்த கதை. அனுமனுக்கு திமிதி என்னும் மச்சகன்னியில் பிறந்த மச்சவல்லபன், ராவணனின் தங்கை மகன் நீலமேகன் போன்றவர்களின் உபகதைகளை உள்ளடக்கியது.
பார்க்க: மச்சவல்லபன் போர்