தி. பரமேசுவரி

From Tamil Wiki

தி.பரமேசுவரி (பிறப்பு: செப்டம்பர் 11, 1970)

வாழ்க்கைக் குறிப்பு

தி.பரமேசுவரி ஜெகதீசுவரி - திருநாவுக்கரசு இணையருக்கு செப்டம்பர் 11, 1970இல் சென்னையில் பிறந்தார். தமிழில் முனைவர் பட்டம் - ம.பொ.சி பார்வையில் பாரதி எனும் தலைப்பு. B.A., M.A., B.Ed., PH.D., Pg diploma in Guidance and Counselling

தனி வாழ்க்கை

திருவண்ணாமலை தானிப்பாடியில் முதுகலைத் தமிழாசிரியராக 2002இல் பணியில் சேர்ந்தேன். பிறகு காஞ்சிபுரம் மானாம்பதியிலும் பண்ருட்டியிலும் பணியாற்றி 2018இல் இராணிப்பேட்டையில் மேலபுலம் அரசு மேனிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி. கணவர் இளங்கோ. மகள் கிருத்திகா. பின் மணவிலக்குப் பெற்றுத் தனி வாழ்வு.

இலக்கிய வாழ்க்கை

பள்ளிக் காலத்தில் போட்டிகளில் கட்டுரைகள் எழுதத் தொடங்கி, வாசிப்பின் நீட்சியில் கவிதைக்குள் நுழைவு. சிற்றிதழ்களில் கவிதைகள் வெளிவருதல். தி. பரமேசுவரி சென்னையில் 1970ல் பிறந்த எழுத்தாளர், தமிழாசிரியர். பூங்குழலி, திலீபா எனும் புனைப் பெயர்களிலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அரசு மேனிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவ்வாய்வேடு “ம.பொ.சி பார்வையில் பாரதி” என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் உயிர்மை, அவள் விகடன், ஆனந்த விகடன், பூங்குயில், புதிய பார்வை, யாதும் ஊரே, இளந்தமிழன், அணி, நொச்சி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. முதல் தொகுப்பு ‘எனக்கான வெளிச்சம்’ - வம்சி புக்ஸ்

புதுமைப்பித்தன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இராசேந்திர சோழன், பஷீர், தாஸ்தாவெஸ்கி, தல்ஸ்தோய், பாரதி, கலாப்ரியா, இளங்கோ கிருஷ்ணன், யூமா வாசுகி, பிரான்சிஸ் கிருபா, பெருந்தேவி ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

விருது

இவருடைய “எனக்கான வெளிச்சம்” கவிதைத் தொகுப்பிற்காக “திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பரிசு” பெற்றுள்ளார்.

நூல்கள்

  • ம.பொ.சி. பார்வையில் பாரதி - ஆய்வு நூல் [2003
  • எனக்கான வெளிச்சம் - கவிதைத் தொகுப்பு [2005]
  • ஓசை புதையும் வெளி - கவிதைத் தொகுப்பு [2010]

பதிப்பித்த நூல்கள்

  • ம.பொ.சி.யின் சிறுகதைகள் [2006]
  • ம.பொ.சி.யின் சிலப்பதிகார விளக்கத் தெளிவுரை [2008]
  • ம.பொ.சி.யின் தமிழன் குரல் - இதழ்த் தொகுப்பு [2010]