பத்ரகாளி
பத்ரகாளி: பார்வதி தேவியின் ஒரு வடிவம். சிவனின் சடைமயிரிலிருந்து வீரபத்திரருடன் தோன்றியவள். தக்ஷனின் யாகத்தை அழிப்பதற்காக பிறந்தவள்.
தோற்றம்
பத்ரகாளியின் தோற்றம் வீரபத்திரர் தோற்றக் கதையுடன் தொடர்புடையது. தக்ஷனின் யாகத்திற்கு சென்ற பார்வதி தேவி தீயில் விழுந்து மாய்ந்தாள். பார்வதி தீயில் விழுந்த செய்தி கேட்ட சிவன் சினம் கொண்டார். தன் சடை மயிரில் ஒன்றை எடுத்து நிலத்தில் அரைந்தார். அதிலிருந்து வீரபத்திரரும், பத்ரகாளியும் தோன்றினர் என்ற கதை தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
பார்க்க: வீரபத்திரர்
புராணங்கள்
அக்னி புராணம்
பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் கம்சன் தேவகியை அடைத்து வைத்திருந்த அறையில் தேவகியின் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தார். வசுதேவரை கிருஷ்ணனை யசோதையிடம் கொடுத்துவிட்டு யசோதையின் மகளை சிறைபட்டிருந்த அறைக்கு எடுத்து வந்தார். கம்சன் அவ்வறைக்கு வந்த போது பெண் குழந்தையை கண்ட அதனை சிறை சுவற்றில் முட்ட முயன்றான். அக்குழந்தை கம்சன் கையிலிருந்து பறந்து ஆகாயத்தின் மேல் சென்றது. அந்த குழந்தை பத்ரகாளியின் ஒரு வடிவம் என அக்னி புராணத்தின் பன்னிரெண்டாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.