being created

மதுரை கூடலூர் கிழார்

From Tamil Wiki
Revision as of 22:25, 5 August 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "மதுரைக் காஞ்சி நூலை ஆக்கியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்தஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராயும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரைக் காஞ்சி நூலை ஆக்கியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்தஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராயும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். தொல்காப்பிய மரபியலில்,

ஊரும் பேரும் உடைத் தொழிற் கருவியும்

யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.

என்ற சூத்திர உரையில் 'அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்கு உரியன' என வரும் குறிப்பு மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உடைமைப்பெயர்க்கு உதாரணமாக அம்பர் கிழான், பேரூர்கிழான்' என்பவை காட்டப்பட்டுள்ளன. இது கொண்டு கூடலூரைத் தம் உடைமையாகக் கொண்டவர் கூடலூர்கிழார் என்றும் ஊகிக்கலாம். அரிசில் கிழார், ஆவூர் கிழார், காரி கிழார், கோவூர் கிழார், என்று இவ்வாறு கிழார் என்னும் சிறப்புடன் புலவர் பலர்சங்க நூல்களிலும் காணப்படுகின்றனர்.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.