under review

பிரபு கங்காதரன்

From Tamil Wiki
Revision as of 20:23, 5 August 2022 by Tamizhkalai (talk | contribs)
பிரபு கங்காதரன்

பிரபு கங்காதரன் (பிறப்பு: அக்டோபர் 27, 1982) தமிழில் எழுதிவரும் கவிஞர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

பிரபு கங்காதரன் அக்டோபர் 27, 1982-ல் பேபி, பாலகங்காதரன் இணையருக்கு சீர்காழியில் பிறந்தார். சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சீர்காழி வலிவலம் தேசிகர் பல்தொழில்நுட்பக்கல்லூரியில் இயந்திரவியலில்(R & Ac) இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பொறியாளர். 2010-லிருந்து அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பிப்ரவரி 12, 2014-ல் மருத்துவ ஆய்வக நுட்புனரான உஷாவை மணந்தார். மகள் அமிர்தா.

அம்புயாதனத்துக் காளி

இலக்கிய வாழ்க்கை

பிரபு கங்காதரனின் முதல் படைப்பு 'அம்புயாதனத்துக் காளி' கவிதைத் தொகுதி 2018-ல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சமாக சாரு நிவேதிதாவைக் குறிப்பிடுகிறார். 2022-ல் 'ஊமத்தை நீலம்' கவிதைத் தொகுப்பு வெளியானது.

நூல்கள்

கவிதைத்தொகுப்பு
  • அம்புயாதனத்துக்காளி - 2018
  • ஊமத்தை நீலம் - 2022

வெளி இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.