சாதனா சகாதேவன்
சாதனா சகாதேவன் (சுஜீவன்) (பிறப்பு: டிசம்பர் 12, 1986) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
சாதனா சகாதேவன் டிசம்பர் 12, 1986இல் இலங்கை, யாழ் மாவட்டத்திலுள்ள புங்குடுதீவு கிராமத்தில் தம்பியையா சகாதேவன், மேனகை இணையருக்குப் பிறந்தார். கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் பொதுத்தராதரத்தில் கலைப்பிரிவு வரை பயின்றார். ஜெர்மனியில் தனியார் தொழிற்சாலையில் இயந்திர துப்பரவு பணியாளனாக உள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
முதல் தொகுப்பு ’தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’ 2018இல் ஸீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளியானது. சாரு நிவேதிதா, ஷோபா சக்தி, எஸ். சம்பந், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், லியோ டாஸ்டாய் ஆகியோரைத் தன் ஆதர்ச எழுத்தாளர்களாகக் கூறுகிறார். "மனித வாழ்வின் புரிந்து கொள்ள முடியாத சிடுக்குகளை மகத்தான கதைசொல்லல் மூலம் கலையாக்குகிறார்" என சாரு நிவேதிதா கூறுகிறார்.
நூல்கள்
சிறுகதைகள்
- தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
- பாவ மன்னிப்பு
- யூதாஸின் முத்தம்
- தாய்சிறுமி
- கத்தலோனா
வெளி இணைப்புகள்
- சாதனா சகாதேவன்: வலைதளம்
- தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள் வாங்க
- தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் - சாதனா - தமிழ் சிறுகதைத் தொகுதி பற்றிய அறிமுகம்: youtube