being created

வெண்முரசு

From Tamil Wiki
Revision as of 13:40, 31 January 2022 by Dr.P.Saravanan (talk | contribs) (சுபஸ்ரீ)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

வெண்முரசு(தொடர் நாவல்)


வெண்முரசு ஒரு தொடர் நாவல். மொத்தம் 26 நாவல்கள். ஏறத்தாழ 25,000 பக்கங்கள். உலக அளவில் உள்ள மிகப் பெரிய நாவல்களுள் இதுவும் ஒன்று. இது மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். ‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் நிறைவும் நாவல் தொடரோடு கதையோட்ட இணைப்புக் கண்ணியையும் கொண்டுள்ளன. இந்த நாவல்கள் ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்ந்துள்ளது. மகாபாரதத்தில் மிகக் குறுகிய இடத்தினைப் பெற்ற சிறிய கதைமாந்தர்களை அவர்களின் செயல்பாடுகள், எண்ணவோட்டங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிவாக்கம் செய்துள்ளது. மானுட பேரறத்தை முதன்மையாகக் கொண்டு, காலவேட்டத்தில் மானுடர் மனத்தில் எழுந்தடங்கும் உணர்ச்சிகளையும் தத்துவ மோதல்களையும் அகதரிசனங்களையும் விரிவாக எடுத்துக்கூறுகிறது. ‘புராணம்’ இன்றைய நவீன இலக்கியமாக அமைவுகொள்ளும் புனைவுச்செயல்பாடு இது. பாகவதத்தை நவீனத் தமிழில் படிக்க மிகப்பெரிய வாய்ப்பினை ‘வெண்முரசு’ தொடர் நாவல் வழங்கியுள்ளது.

பதிப்பு

இந்த நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜனவரி 1, 2014முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூலை 16, 2020 இல் நிறைவு பெற்றது. மொத்தம் 1932 அத்யாயங்கள். ‘வெண்முரசு’ தொடர் நாவலின் முதல் நான்கு நாவல்களை மட்டும் நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது. பின்னர் கிழக்கு பதிப்பகம் அனைத்து நாவல்களையும் வெளியிட்டது. ‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் சாதாரண பதிப்பாகவும் செம்பதிப்பாகவும் வெளிடப்பட்டுள்ளன. https://venmurasu.in/ என்ற தளத்தில், இந்தத் தொடர் நாவலை இலவசமாகப் படிக்கலாம்.

ஆசிரியர்

எழுத்தாளர் ஜெயமோகன் 1980இல் இருந்து தொடர்ந்து நவீன இலக்கியப் படைப்புகளை உருவாக்கி வருகிறார்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

வெண்முரசு தொடர் நாவல் - அறிவிப்புப் பதாகை.

கதை மாந்தர்

உருவாக்கம்

நூல் பின்புலம்

இலக்கிய இடம் / மதிப்பீடு

‘வெண்முரசு’ நாவல் தொடரின் தலைப்புகள்

1.   முதற்கனல்

2.  மழைப்பாடல்

3.  வண்ணக்கடல்

4.  நீலம்

5.  பிரயாகை

6.  வெண்முகில் நகரம்

7.   இந்திர நீலம்

8.  காண்டீபம்

9.  வெய்யோன்

10. பன்னிருபடைக்களம்

11.  சொல்வளர்காடு

12. கிராம்

13. மாமலர்

14. நீர்க்கோலம்

15. எழுதழல்

16. குருதிச்சாரல்

17. இமைக்கணம்

18. செந்நாவேங்கை

19. திசைதேர்வெள்ளம்

20. கார்கடல்

21. இருட்கனி

22. தீயின் எடை

23. நீர்ச்சுடர்

24. களிற்றியானைநிரை

25. கல்பொருசிறுநுரை

26. முதலாவிண்  

பிற வடிவங்கள்

வெண்முரசு தொடர் நாவலின் நான்காவது நாவல் ‘நீலம்’. அதனை முழுவதுமாகத் தன் குரலால் ஒலிப்பதிவு செய்து, ஒலிக்கோப்பாக இணையத்தில் வெளியிட்டுள்ளார் சுபஸ்ரீ.

மொழியாக்கம்

உசாத்துணை

== [[Category:Tamil Content]] ==