under review

உறையூர் இளம்பொன் வணிகனார்

From Tamil Wiki
Revision as of 17:31, 7 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "உறையூர் இளம்பொன் வணிகனார் சங்க காலப் புலவர். இவர் நடுகல் பற்றிய புறநானூற்றுப் பாடல் ஒன்று சங்கத்தொகை நூலில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == சோழர்களின் தலைநகரான உறையூரில் பிறந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உறையூர் இளம்பொன் வணிகனார் சங்க காலப் புலவர். இவர் நடுகல் பற்றிய புறநானூற்றுப் பாடல் ஒன்று சங்கத்தொகை நூலில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

சோழர்களின் தலைநகரான உறையூரில் பிறந்தார். உறையூரில் பொன்வாணிகம் செய்து வாழ்ந்துவந்தார்.

இலக்கிய வாழ்க்கை

புறநானூற்றின் 264வது பாடல் இவர் பாடியது. இந்தப்பாடலில் நடுகல் பற்றிய செய்தியும், அதை வழிபடும் முறை குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.

நடுகல் செய்தி

  • பரல் கற்களை அடுக்கிக் கட்டிய பதுக்கைக் கோயிலில் நடுகல் நாட்டினர்.
  • மரல் நாரைக் கிழித்து மாலை தொடுத்து அணிவித்துள்ளனர். மயில் பீலியும் கட்டிவைத்துள்ளனர்.
  • நடுகல்லில் பெயர் பொறித்தனர்.
  • பகைவர் ஓட்டிய ஆனிரைகளைக் கன்றொடு மீட்டுத் தந்தவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது.

பாடல் நடை

</poem> பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி, மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு, அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து இனிநட் டனரே! கல்லும் ; கன்றொடு கறவை தந்து பகைவர் ஓட்டிய நெடுந்தகை கழிந்தமை அறியாது இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே? <poem>

உசாத்துணை

புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3 TVA_BOK_0017735_சங்கத்_தமிழ்ப்புலவர்_வரிசை.pdf

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.