தொ.மு.சி. ரகுநாதன்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
This page is being created by User:Dr.P.Saravanan
தொ.மு.சி. ரகுநாதன் (அக்டோபர் 20, 1923 - டிசம்பர் 31, 2001) ‘தொ.மு.சி’ என்று பரவலாக அறியப்பட்டார். இயற்பெயர் தொ. மு. சிதம்பர ரகுநாதன். இவர் கம்யூனிஸ்ட் எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், விமர்சகர். இவரின் ‘பஞ்சும் பசியும்’ (1951) நாவல் தமிழ் நாவல்களில் முதன் முதலில் பிறமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகக் கருதப்படுகிறது. இதனை கமில் சுவலபில் ‘செக்’ மொழியில் மொழிபெயர்த்தார். தொ.மு.சி. ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். இவர், ‘சாந்தி’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களைத் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகம் செய்துவைத்தார். புதுமைப்பித்தன் இவரைத் ‘தன் வாரிசு’ என்று குறிப்பிட்டார். இவரின் படைப்புகளில் முற்போக்குச் சிந்தனைகள் கலைநோக்குடன் அல்லாமல் பிரச்சாரத் தன்மையில் வெளிப்பட்டிருக்கும். இவரது ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
பிறப்பு, கல்வி
தொ.மு.சி. ரகுநாதன் திருநெல்வேலியில்
தனிவாழ்க்கை
இவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான் தமிழறிஞர். இவரின் அப்பா தொண்டைமான் முத்தையா ஓவியர்; புகைப்படக் கவிஞர். அண்ணன் பாஸ்கர தொண்டைமான் பேச்சாளர்; எழுத்தாளர். பிற்காலத்தில் அவர் மாவட்ட ஆட்சியாளராகவும் இருந்தார்.