இ. நாகேசையர்
From Tamil Wiki
To read the article in English: E. Nakeshiyer.
இ. நாகேசையர் (19-ம் நூற்றாண்டு) ஈழத்து சைவ அறிஞர், தமிழ் புலவர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இ.நாகேசையர் இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையில் இராமசாமி ஐயருக்கு மகனாக பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
இ.நாகேசையர் வட்டுக்கோட்டை, அடைக்கலந் தோட்டத்தில் கோவில் கொண்டுள்ள கந்தசுவாமியை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு "நாணிக்கண் புதைத்தல்" எனும் துறைமேல் நூறு செய்யுள்கள் பாடினார். "அமுத நுணுக்கம்" என்னும் பெயரில் ஒரு விஷ வைத்திய நூலினை எழுதினார்.
மறைவு
இ.நாகேசையர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1862-ல் காலமானார்.
நூல்கள் பட்டியல்
கோவை
- அடைக்கலங் கோவை
மருத்துவம்
- அமுத நுணுக்கம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந.வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:01 IST