கருவூர் கிழார்
கருவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
சேரர்களின் தலைநகரான இருந்த கருவூரில் பிறந்தார். இன்றைய கரூர் மாவட்டமே கருவூராக வழங்கப்பட்டது.
இலக்கிய வாழ்க்கை
குறுந்தொகையின் 170வது பாடல் கருவூர் கிழார் பாடியது. குறிஞ்சித்திணைப்பாடல். ”தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை யாற்றாளெனக் கவலையுற்ற தோழிக்கு, ’தலைவனது நட்புக் கெடாதென்பதை யான் அறிந்துள்ளேன்; பலர் தமக்குத் தோற்றியவற்றைச் சொல்லுக. அதனால் யான் உறுதி நீங்கேன்’ என்று தலைவி கூறியது” என்ற துறையின் கீழ் உள்ளது. எருவை என்னும் நீர்வாழ் செடியை யானை விரும்பி உண்ணும்; அதன் பூ நீண்ட குச்சியில் கொத்தாகப் பூத்திருக்கும் என்ற செய்தியை பாடல்வழி அறியலாம்.
பாடல் நடை
- குறுந்தொகை - 170
பலவும் கூறுகவ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/kuruntokai/kuruntokai170.html#.YmZjv9pBzIU
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.