இ. நாகேசையர்
From Tamil Wiki
Revision as of 16:11, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
To read the article in English: E. Nakeshiyer.
இ. நாகேசையர் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை, யாழ்ப்பாணம், வட்டுக் கோட்டையில் இராமசாமி ஐயருக்கு மகனாக நாகேசையர் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். வட்டுக் கோட்டையில் கோவில் கொண்டுள்ள கந்தசுவாமியை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு ’நாணிக்கண் புதைத்தல்’ எனும் துறைமேல் நூறு செய்யுள்கள் பாடினார். அமுத நுணுக்கம் எனும் பெயருடன் ஒரு விஷ வைத்திய நூலினை எழுதினார்.
மறைவு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1862-ல் இ. நாகேசையர் காலமானார்.
நூல்கள் பட்டியல்
கோவை
- அடைக்கலங் கோவை
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந.வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:01 IST