under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2009

From Tamil Wiki
Revision as of 12:08, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள் தொகுப்பு-2009

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-2009

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி காத்திருக்கிறாள் கரும்பு பா. முத்துகுமார் தினமணி கதிர்
பிப்ரவரி ஹை வேல்யூ செக் பாக்கியம் ராமசாமி அமுதசுரபி
மார்ச் என் நதியின் கல்லறையில்... இரா. சோமசுந்தரம் தினமணி கதிர்
ஏப்ரல் படித்துறை! சரவணன் கல்கி
மே சூரிய குளத்து முதலைகள் சுப்ர. பாலன் கல்கி
ஜூன் அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா! ஆதவன் தீட்சண்யா தீராநதி
ஜூலை சம்மாவின் இருப்பிடம் தவமுதல்வன் கல்கி
ஆகஸ்ட் சின்னஞ்சிறு தீவு ஒண்டு! ஏ.ஏ.எச்.கே. கோரி கல்கி
செப்டம்பர் நாகதாளி எஸ். தேன்மொழி தீராநதி
அக்டோபர் ஹேப்பி தீபாவலி ராஜூ முருகன் ஆனந்த விகடன்
நவம்பர் துவரம் பருப்பின் விலை ஏன் ஏறியது? ஷங்கர் பாபு குங்குமம்
டிசம்பர் வாழ்த்தொன்று போதும்! தஞ்சாவூர்க் கவிராயர் கல்கி

2009-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை

2009-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, ராஜூ முருகன் எழுதிய ‘ஹேப்பி தீபாவலி’ தேர்ந்தெடுக்கப்பட்டது. தேவகோட்டை வா. மூர்த்தி இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை பாலு சத்யா தேர்வு செய்தார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jan-2023, 06:12:48 IST