மு. சுயம்புலிங்கம்
From Tamil Wiki
மு. சுயம்புலிங்கம் (பிறப்பு: 1944) தமிழ்க் கவிஞர், சிறுகதையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
மு. சுயம்புலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கிராமத்தில் 1944-ல் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
மு. சுயம்புலிங்கம் கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கல்குதிரை என்ற சிற்றிதழில் ஆரம்பக் காலங்களில் எழுதி வந்தார். தமிழின் வட்டார வழக்கான கரிசல் மொழியில் உள்ள இவரது படைப்புகள் இலக்கிய உலகில் கவனம்பெற்றன.
விருதுகள்
- தமிழ் இந்து இதழின் யாதும் ஊரே நிகழ்வில் தமிழ்திரு 2023 விருது பெற்றார்.
நூல் பட்டியல்
கவிதைத்தொகுப்புகள்
- நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்
- தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்
கதைத் தொகுப்புகள்
- ஒரு பனங்காட்டு கிராமம்
- நீர்மாலை
- ஊர்க்கூட்டம்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.