பாவிக அணி
பாவிக அணி தண்டியலங்காரம் பொருளணியியலில் கூறப்படும் இறுதி அணி. மற்ற அணிகளைப்போல் தனிநிலைச் செய்யுளில் (ஒரு தனிப்பாடலில்) மட்டும் அமையாமல், ஒரு காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தையோ, நீதியையோ குறிக்கிறது.
இலக்கணம்
பாவிகம் காப்பியமாகிய தொடர்நிலைச் செய்யுளில் கவிஞரால் கருதிச் செய்யப்படுவதோர் குணம் ஆகும். இதனைத் தண்டியலங்காரம்
பாவிகம் என்பது காப்பியப் பண்பே (தண்டி 91) எனக் குறிப்பிடுகிறது.
காப்பியப் பண்பு ஒரு காப்பியம் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது அல்லாமல், தனித்து ஒரு பாட்டால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது மற்ற அணிகள் ஒரு பாடலில் மட்டும் அமைவது போலன்றி காப்பியம் கூறும் முக்கியப் பொருளோ, தத்துவமோ, நீதியோ பாவிகம் எனப்படுகிறது.
எடுத்துக்காட்டுகள்
தண்டியலங்கார உரையில் பாவிக அணிக்குச் சான்றாக கம்பராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திர புராணம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.
பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப (ராமாயணம்)
பொறையில் சிறந்த கவசம் இல்லை; (மகாபாரதம்)
வாய்மையில் கடியது ஓர் வாளி இல்லை.(அரிச்சந்திர புராணம்)
சிலப்பதிகாரம்
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
என்ற மூன்று நீதிகளும் சிலப்பதிகாரத்தின் பொருளாக அமைவதால் சிலப்பதிகாரம் பாவிக அணிக்குச் சான்றான காப்பியம்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.