under review

மகரம்

From Tamil Wiki
Revision as of 10:21, 7 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/Updated by Je)
மகரம்
மகரம்

மகரம் (1,ஜூலை 1919 – 4 ஏப்ரல் 2001) ) தமிழ் எழுத்தாளர். நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதினார். தமிழ் இலக்கியம் சார்ந்த தொகுப்பு நூல்களை வெளியிட்டவர். எழுதுவது எப்படி என்ற இவருடைய தொகைநூல் புகழ்பெற்றது.

தனிவாழ்க்கை

மகரத்தின் இயற்பெயர் கே.ஆர்.கல்யாணராமன்.மகரம் சென்னையில் 1 ஜூலை 1919 அன்று பிறந்தார். சென்னை அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றினார். இவர் மனைவி சங்கரி. ஆர்.சூடாமணி குடும்பத்துக்கு அணுக்கமானவர். சூடாமணி எழுதுவதற்கு காரணமாக அமைந்தார்.

இலக்கியவாழ்க்கை

மகரம் கல்யாணராமன் 1944 ஆம் ஆண்டில் எழுத ஆரம்பித்தார். க. ரா என்ற புனைபெயரில் 1944 கல்கி இதழ்களில் மூன்று கட்டுரைகளை எழுதினார். பின்னர் அதே ஆண்டில் ஆனந்த விகடன் இதழில் கே. ஆர். கே என்ற பெயரில் 'சங்கீத அகராதி' என்ற கட்டுரையை எழுதினார். விகடன் ஆசிரியர் தேவன் இவருக்கு கல்யாணராமனின் பிறந்த ராசியான 'மகரம்' என்ற புனைபெயரை சூட்டி அப்பெயரிலேயே எழுத வேண்டினார். அப்பெயரிலேயே தொடர்ந்து பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார்.

இவரது நகைச்சுவைக் கட்டுரைகள் 10 நூல்களாகவும், சிறுகதைகள் இரண்டு தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. இவரது கட்டுரைகள் சந்திரோதயம், பாரிஜாதம், மணிக்கொடி போன்ற இதழ்களிலும், இலங்கை தினகரன் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன. எழுதுவது எப்படி என்ற கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. புகழ்பெற்ற 101 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து, வானதி பதிப்பகத்தின் மூலம் நான்கு தொகுதிகளாக வெளியிட்டார்.

மறைவு

2001ல் அநுத்தமா எழுதிய கேட்டவரம் என்னும் நாவலில் வரும் கேட்டவரம்பாளையம் ராமர் கோயிலின் ராமநவமி விழாவுக்குச் செல்லும்போது பேருந்திலேயே மறைந்தார்.

உசாத்துணை

திருப்பூர் கிருஷ்ணன், தினமணி கட்டுரைl



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.