being created

இடாகினி பேய்

From Tamil Wiki
Revision as of 14:47, 22 March 2024 by Ramya (talk | contribs) (Created page with "இடாகினி பேய் திருக்கோவிலூர் அருகே வழிபடப்படும் நாட்டார் தெய்வம். சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பிணங்களைத் தின்னும் பேய். == தொன்மக்கதை == மாலதி என்னும் ஒரு பார்ப்பனப் பெண் மாற்றா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இடாகினி பேய் திருக்கோவிலூர் அருகே வழிபடப்படும் நாட்டார் தெய்வம். சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பிணங்களைத் தின்னும் பேய்.

தொன்மக்கதை

மாலதி என்னும் ஒரு பார்ப்பனப் பெண் மாற்றாள் குழந்தைக்குப் பசுவின் பாலைச் கொடுக்கும் போது பால் விக்கியதால் அவள் கையிலேயே குழந்தை இறந்தது. பல கோவில்களுக்குச் சென்று குழந்தையின் உயிரை மீட்டெடுக்க வேண்டினாள். சாத்தன் கோயிலில் வேண்டிக் கொண்டிருக்கும்போது அருகிலிருந்த சுடுகாட்டிலிருந்த இடாகினிப் பேய் அழகான இளம்பெண்ணாக வந்து “முற்பிறவியில் புண்ணியம் புரியாதவர்க்குத் தெய்வம் வரங்கொடுப்பதில்லை” என்று கூறியவாறு கையிலிருந்த குழந்தையை வாங்கி விழுங்கினாள். சாத்தன் தோன்றி வழியில் அவள் திரும்பிச் செல்லும் போது அக்குழந்தையைக் காண்பாள் என வரம் கொடுத்தது. அது போலவே அவள் ஒரு குழந்தையைக் கண்டெடுத்துக் கொண்டு போய் தன் மாற்றாள் கையில் கொடுத்தாள்.

வழிபாடு

விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் அருகே மாரங்கியூர் என்ற இடத்தில் இடாகினி பேய்க்கான வழிபாட்டுக் கல் உள்ளது. இதன் அருகிலேயே பல்லவர் கால கொற்றவையும் உள்ளது.

இடாகினி பேயை உள்ளூர் மக்கள் காளி ஆத்தா என்றும் அழைப்பர். வேண்டியதைக் கொடுக்கும் என்றும், கால்நடைகளின் காய்ச்சலை சரிசெய்யும் என்றும் நம்பிக்கை உள்ளது.

உசாத்துணை

  • இடாகினி பேய் | சிலப்பதிகாரம்: tamilarthadam



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.