being created

எஸ். இஸ்மாலிஹா

From Tamil Wiki
Revision as of 10:10, 12 February 2024 by Ramya (talk | contribs)

எஸ். இஸ்மாலிஹா ()

வாழ்க்கைக் குறிப்பு

கண்டி புசல்லாவையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சேகுதாவுத்; தாய் சித்தி ரசீதா. இந்தியாவில் உள்ள திருநெல்வேலியைச் சேர்ந்தவர். வியாபாரம் செய்வதற்காக இலங்கைக்கு வந்தவர். தாயார் சித்திரசீதா ரம்பொடையைச் சேர்ந்த முன்னாள் கிராம சேவகர் பீர் முகமதுவின் மகளாவார். புசல்லாவையில் உள்ள பெருமை பெற்ற பரிசுத்த திருத்துவக் கல்லூரியில் கல்வி கற்றேன். அங்கு எனக்கு தமிழ் ஆசானாக இருந்த இணுவிலை சேர்ந்த பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம். புசல்லாவவை பரிசுத்த திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்றார். பாடசாலை அதிபரான இவர் ஓய்வுபெற்ற பின்னர் தனியார் சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபராக உள்ளார்.

புசல்லாவை பரிசுத்த திருத்துவ கல்லூரியில் உயர்தரம் கற்றபின் 1977 ஆம் வருடம் முதல் நியமனம் கிடைத்தது. மத்திய மாகாணத்தில் உள்ள ரொத் சைல்ட் தமிழ் வித்தியாலயம், கழுகல தமிழ் வித்தியாலயம், யோகலட்சுமி தமிழ் வித்தியாலயம் கலஹா ஆகிய அரசாங்க பாடசாலைகளில் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை கடமையாற்றிவிட்டு, ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் கண்டி கிரீன்ஹில் சர்வதேச பாடசாலையில் கடமை புரிந்த பின்பு தற்போது ஹாவட் மேத்தா சர்வதேச பாடசாலையில் கடமை ஆற்றுகிறேன்.

குழந்தைகளோடு இருப்பதும் அவர்களுக்கு கற்பிப்பதும் எனக்கு பிடித்தமான ஒன்று. இதை முழு மனதுடன் சேவையாகவே செய்கிறேன். கஷ்டப் பிரதேச அரசாங்க பாடசாலைகளிலே அதிக காலங்கள் கடமையாற்றினேன். அந்தப் பணியை நான் விருப்புடன் செய்தேன்.

தனிவாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பயணம் முடியவில்லை எனும் சிறுகதை 1994ஆம் ஆண்டு காங்கிரஸ் பத்திரிகையில் எழுதியதன் மூலம் எழுத்துலகிற்குள் பிரவேசித்துள்ளார். நான், குன்றின் குரல், கொந்தளிப்பு ஆகிய சஞ்சிகைகளிலும் தினகரன், வீரகேசரி, தினக்குரல், நெத் ஆகிய பத்திரிகைகளிலும் மத்திய மாகாண சாகித்திய விழா மலரிலும் பிரான்ஸ் நாட்டு பாரிஸ் முரசு பத்திரிகையிலும் இவரின் சிறுகதை மற்றும் குறுநாவல் இடம்பெற்றுள்ளன. உழைக்கப் பிறந்தவர்கள், அம்மா ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களிலும் மை, பெண்கள் சந்திப்பு மலர் 2005 ஆகியவற்றிலும் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கமும் மாவத்த சஞ்சிகை வெளியீட்டாளருமான சிங்கள கவிஞர் பராக்கிரம கொடிதுவக்குவின் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்து சா லங்கா, பிபிதென பெய ஆகிய நூல்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக் கவிதைகள் தமிழில் விழிப்பு என்ற சஞ்சியில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஷர்மிலாவின் இதயராகம் திரைப்படத்தில் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளார்.


எனது இலக்கிய பயணம் பள்ளியில் படிக்கும் பொழுதே ஆரம்பமாகிவிட்டது எனலாம். இலக்கிய ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கையெழுத்து பத்திரிகைகளை நடத்தினோம். அதற்கு ஆசிரியர்களும் ஒத்துழைப்பு நல்கினார்கள். ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கல்கண்டு முதலிய பத்திரிகைகளும், வாசிகசாலையில் இருந்து கிடைத்த தமிழ் நூல்களும் எங்களை எழுத ஊக்குவித்தன. இயற்கையை இரசிக்கும் ஆசையும் மானிடர்களின் துயரங்களை உற்று நோக்கி அதற்கு தீர்வு காணும் வேகமும் என்னை எழுதத் தூண்டின எனலாம். ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலிக்கே நான் எழுதி வந்தேன். பூவும் பொட்டும், மங்கையர் மஞ்சரி, வாலிப வட்டம், இசையும் கதையும் போன்றவற்றை நான் எழுதியுள்ளேன். காங்கிரஸ் பத்திரிகையில் ‘பயணம் முடியவில்லை’ என்ற சிறுகதையே எனது முதல் சிறுகதை ஆகும். இதன் மூலம் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன். இலங்கையில் வெளிவந்த தினகரன், வீரகேசரி, தினபதி, நான், கொழுந்து, கொந்தளிப்பு, மலை குருவி, சிந்தாமணி, தீர்த்தக்கரை போன்ற பத்திரிகைகளிலும் இன்னும் பல பத்திரிகைகளிலும் அடிக்கடி எழுதி உள்ளேன். எனது எழுத்துக்கள் இலங்கையிலும் வெளிநாட்டு சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. பல கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

1992 இல் “ஒரே மண்” என்ற சிறுகதை பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவந்த பாரிஸ் முரசு என்ற பத்திரிகையில் வெளிவந்தது. 1994இல் “துறவி” பதிப்பகத்தாரின் “உழைக்கப் பிறந்தவர்கள்” என்ற தொகுப்பில் “அப்பாவுக்கு கல்யாணம்” என்ற சிறுகதை வெளிவந்தது. (இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பரிசு பெற்ற சிறுகதை ஆகும்) அந்தணி ஜீவாவின் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பில் “காயாம் பூவும் வாழை மரமும்” என்ற எனது சிறுகதை இடம் பெற்றுள்ளது. சுவீஸ் நாட்டின் ஊடரறு வெளியீட்டின் “மை” என்ற கவிதை தொகுதியில் 2005 ஆம் ஆண்டு எனது கவிதை இடம்பெற்றுள்ளது. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கமும்” மாவத்த” சங்சிகை வெளியீட்டாளரும் கூட்டாக வெளியிட்ட சிங்கள கவிஞர் பராக்கிரம கொடி துவக்குவினால் மொழிபெயர்க்கப்பட்ட “இந்து சா லங்கா” “பிபி தென பெய” ஆகிய நூல்களிலும் எனது கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. (இக் கவிதைகள் தமிழில் “விழிப்பு” என்ற சஞ்சிகையில் வெளிவந்ததாகும்.) ‘ FOR THE DAWING OF THE NEW ‘ , ‘ DREAM BOAT ‘ ஆங்கிலத்தில் எனது கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. ஹிஸ்புல்லா பவுண்டேஷன் ஏற்பாட்டில் காத்தான்குடியில் வெளியிடப்பட்ட “நதியை பாடும் நந்தவனங்கள்” என்ற நூலிலும் எனது கவிதை இடம்பெற்றதோடு, அங்கே பொற்கிழி வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டேன். பல்வேறு கவியரங்கம்களிலும் நான் கவிதை பாடியுள்ளேன்.

விருதுகள்

  • இரத்தின தீப விருது - 1990
  • 26 வருட சேவைக்காக தினகரன் விருது

1996 இல் கலைஞர் விருது. 1996-2019இல் இரத்தின தீப விருது. 2012 இல் 25 வருட இலக்கிய சேவைக்காக தினகரன் விருது. 2014 ஹிஸ்புல்லா பவுண்டேஷன் பொற்கிழியும் விருதும். 1997 – இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கான பரிசு. ரோட்டரி கிளப் நடத்திய கண்டி சுற்றாடல் மேம்பாடு தொடர்பான போட்டியில் முதல் பரிசு. 2020-2021.11.03 அன்று வழங்கப்பட்ட கலாபூஷணம் விருது. 2021-சுட்டு விரல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவில் கிடைத்த விருது. (இந்நூலில் எனது கவிதையும் இடம் பெற்றுள்ளது.) 2023-கண்டி ரத்ன தீபம் அமைப்பினால் வழங்கப்பட்ட “சித்திலெப்பை” ஞாபகார்த்த விருது. ஸ்ரீலங்கா பெண் கிளப் அமைப்பினால் கலாபூஷணம் பெற்றமையை கௌரவித்து 2021-12-24 வழங்கப்பட்ட விருது. 1977 தொடக்கம் 2011 வரை அதிபர் சேவையை செய்தமைக்காக சேவைகள் நலன் பாராட்டு விழாவில் கம்பளை வலய தமிழ் அதிபர்கள் ஒன்றியம் 3-7-2012 எனக்கு வழங்கிய கௌரவ விருது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட “சாமிலாவின் இதய ராகம்” எனும் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளேன்.

நூல் பட்டியல்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.