பத்மா இளங்கோவன்
பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) () ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுவர் கதைப்பாடல்கள், கதைகள் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
பத்மா இளங்கோவன் இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்ததார். ராணி மகேசு என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். பத்மா மூத்த எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பிரான்ஸில் வாழ்ந்து வருகிறார்.
தனிவாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை
தனது கல்லூரிகாலத்திலேயே எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார். கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியத்தில் எழுத்துத்திறனை வெளிப்படுத்தி வருகிறார் எழுத்தாளர். இவரின் ஆக்கங்கள் இலங்கை வானொலி, ஈழநாடு, தினகரன், தினபதி ஆகியவற்றிலும் மற்றும் பாரிஸ் வெளியாகும் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் இணையத்தளங்களிலும் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. பரிசு – சிறுவர் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர்.
விருதுகள்
- விருது தமிழகத்தில் சிறந்த பரிசான சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறுவர் இலக்கியப் பணிக்கான பரிசு இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நூல் பட்டியல்
- குற்றவாளிக்கூண்டில் கவிஞர் கண்ணதாசன்
- செந்தமிழ் மழலைப் பாடல்கள்
- செந்தமிழ் பாப்பாப் பாடல்கள்
- செந்தமிழ் சிறுவர் பாடல்
- பிள்ளைப்பாடல்கள்
- மழலைப்பாடல்கள்
உசாத்துணை
- ஆளுமை:இளங்கோவன், பத்மா: noolaham
- பத்மா இளங்கோவனின் செந்தமிழ் மழலைப் பாடல்கள், செந்தமிழ் சிறுவர் பாடல் மீது ஒரு பார்வை: இரா. சம்பந்தன்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.