தி இந்தியன் ரிவ்யூ
தி இந்தியன் ரிவ்யூ (The Indian Review), (1900), தமிழரான ஜி.ஏ. நடேசனால் தொடங்கப்பட்ட ஆங்கில இதழ். கல்வி கற்ற இந்தியர்களிடையே தேச விடுதலை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதையும், பொது மக்களின் எண்ணங்களை, கருத்துக்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. காந்தி, அன்னிபெசன்ட் தொடங்கி வில்லியம் வெட்டர்பன் போன்ற ஐரோப்பியர்கள் வரை பலர் தி இந்தியன் ரிவ்யூ இதழில் எழுதினர்.
பிரசுரம், வெளியீடு
தி இந்தியன் ரிவ்யூ, சென்னையில், ஜனவரி மாதம், 1900-த்தில், பதிப்பாளர் ஜி.ஏ. நடேசனால் தொடங்கப்பட்ட மாத இதழ். ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்த நடேசன், தி மெட்ராஸ் டைம்ஸ் (The Madras Times) இதழில் பணியாற்றினார். தி இந்தியன் பாலிடிக்ஸ் (The Indian Politics) என்ற ஆங்கில இதழைத் தொடங்கி நடத்திய அனுபவம் கொண்டிருந்தார். தேச விடுதலை உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக தி இந்தியன் ரிவ்யூ இதழைத் தொடங்கினார்.
தி இந்தியன் ரிவ்யூ இதழ், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வாரத்தில் வெளியானது. தொடக்க காலத்தில் இதழ் 56 பக்கங்களுடன் வெளிவந்தது. இதழின் ஆண்டு சந்தா, தபால் செலவுடன் சேர்த்து இந்தியாவுக்கு: ரூபாய் ஐந்து. இங்கிலாந்துக்கு ரூபாய் பத்து. அமெரிக்காவுக்கு மூன்று டாலர்.
தனிப்பிரதியின் விலை: இந்தியாவுக்கு எட்டணா; வெளிநாடுகளுக்கு ரூபாய் ஒன்று. இந்த இதழை ஜி.ஏ. நடேசனின் சொந்தப் பதிப்பக நிறுவனமான ஜி.ஏ. நடேசன் & கோ வெளியிட்டது.
நோக்கம்
கல்வி கற்ற இந்தியர்களிடையே தேச விடுதலை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும், பொது மக்களின் எண்ணங்களை, கருத்துக்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் தி இந்தியன் ரிவ்யூ இதழின் நோக்கங்களாக இருந்தன.
உள்ளடக்கம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.