மறைமலையடிகளார் விருது
From Tamil Wiki
Revision as of 03:58, 27 December 2023 by Tamizhkalai (talk | contribs)
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் மறைமலையடிகளார் விருதும் ஒன்று.
மறைமலையடிகளார் விருது
தனித்தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2019-ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் மறைமலையடிகளார் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச் சான்றும் கொண்டது. ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சித்திரைத் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது.
மறைமலையடிகளார் விருது பெற்றோர்
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
2019 | ப. முத்துக்குமாரசுவாமி |
2020 | மறை. தி. தாயுமானவன் |
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.