இரா. மணியன்
From Tamil Wiki
இரா. மணியன் (பிறப்பு: ஜூன் 1, 1932) ஒரு தமிழகக் கவிஞர். எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கிய நூல்கள் பலவற்றுக்கு உரை எழுதினார். வாழ்க்கை வரலாற்று நூல்கள் பலவற்றை எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது, பெரியார் காவியம். தனது நூல்களுக்காகத் தமிழக அரசின் ‘பாராதியார் விருது’ உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.