under review

மதுரை வேளாசான்

From Tamil Wiki
Revision as of 08:11, 4 November 2023 by Ramya (talk | contribs) (Created page with "மதுரை வேளாசான் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == மதுரை வேளாசான் மதுரையில் பிறந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரை வேளாசான் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை வேளாசான் மதுரையில் பிறந்தவர். ஆசான் என்பது ஆசிரியரைக் குறிப்பது. அந்தணர்.

இலக்கிய வாழ்க்கை

மதுரை வேளாசான் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் 305வது பாடலாக உள்ளது. வாகைத்திணைப்பாடல். துறை: பார்ப்பன வாகை.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்
  • பார்ப்பான் பசலைக்கொடி போல் வாடிய இடுப்பினை உடையவன். மென்மையாக ஊர்ந்து நடப்பவன். பச்சை மனம் கொண்டவன். அவன் இரவு வேளையில் வந்தான். அரண்மனை வாயிலில் யாராலும் தடுத்து நிறுத்தப்படாமல் உள்ளே சென்றான். ஏதோ சில சொல் சொன்னான். அதனைக் கேட்டதும் முற்றுகை இட்டவர் மதிலில் ஏறச் சாத்திய ஏணியை எடுத்துவிட்டனர். அடைக்கப்பட்டிருந்த கோட்டைக் கதவின் சீப்பு (கீழ்த்தாழ்ப்பாள்) திறந்து விடப்பட்டது. போர் நின்றது.
  • அறிவுடையரின் சொல்லின் வன்மை பற்றிய பாடல்

பாடல் நடை

  • புறநானூறு 305 (திணை: வாகை; துறை : பார்ப்பன வாகை)

வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,
உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி,
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.