பி.எஸ். செட்டியார்
பி.எஸ். செட்டியார் (பா. பக்கிரிசுவாமி செட்டியார்; பி. பக்கிரிசுவாமி செட்டியார்) (1905-1967) எழுத்தாளர், இதழாளர், திரைக்கதை-வசன ஆசிரியர், உதவி இயக்குநர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களுக்காகப் பல நூல்களை எழுதினார். தமிழ்த் திரைப்படத்துறை சார்ந்து வெளிவந்த, தமிழின் முதல் இதழான ‘சினிமா உலகம்’ இதழின் ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
பி.எஸ். செட்டியார் என்னும் பக்கிரிசுவாமி செட்டியார், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், 1905-ல், பாவாடைசாமி செட்டியார்-கமலத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். நன்னிலத்தில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், வித்துவான் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
பி.எஸ். செட்டியார், மணமானவர். சென்னை, தொண்டை மண்டலம், துளுவ வேளாளர் உயர் கலாசாலையில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
பி.எஸ். செட்டியார் பள்ளி மாணவர்களுக்காகப் பல நூல்களை எழுதி வெளியிட்டார். பி.எஸ். செட்டியார் எழுதிய ‘அன்னை வாசகம்’ நூல், பள்ளி மானவர்களுக்குத் துணைப்பாடமாக வைக்கப்பட்டது. இலக்கிய இதழ்கள் பலவற்றில் தமிழ் இலக்கியம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார்.
இதழியல்
பி.எஸ். செட்டியார், 1935-ல், சினிமா உலகம் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். திரைத்துறை சார்ந்த பல செய்திகளை, நேர்காணல்களை வெளியிட்டார். திரைத்துறை சார்ந்து வெளிவந்த தமிழின் முன்னோடி இதழாக சினிமா உலகம் இதழ் மதிப்பிடப்படுகிறது.
திரையுலகம்
அரசியல்
மறைவு
இலக்கிய இடம்
நூல்கள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.