அபிநந்தநாதர்
From Tamil Wiki
அபிநந்தநாதர் சமண சமயத்தின் நான்காவது தீர்த்தங்கரர்.
வாழ்க்கை வரலாறு
அபிநந்தநாதர் இக்சவாகு குலமன்னர் சன்வராவுக்கும் சித்தார்த்தாவுக்கும் மகனாக அயோத்தியில் மாசி வளர்பிறை 12ஆம் நாள் பிறந்தார். ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் வைகாசி வளர்பிறை 6ஆம் நாள்மோட்சம் அடைந்தார். இவர் ஐம்பது லட்சம் ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், 350வில்(1050 மீட்டர்) உயரம் இருந்ததாகவும் சமணர்கள் நம்புகின்றனர்.
அடையாளங்கள்
- நிறம்: தங்கம்
- மரம்: அரச மரம்
- விலங்கு: குரங்கு
- முதல் உணவு: மன்னர் இந்திரதத்தனால் வழங்கப்பட்ட கீர்.
- இயக்கர்: யக்யேஸ்வரன்
- யட்சினி: காளிகா
அபிநந்தநாதர் கோயில்
- அபிநந்தநாதர் கோயில், மதுபன், ஜோர்ஹாத், அசாம்
- அபிநந்தநாதார் சந்நதி, சிகார்ஜி, ஜார்க்கண்டு
- அபிநந்தநாதரின் பாதச்சுவடுகள், சிகார்ஜி
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.