being created

சி.ஆ. ராமசாமிப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 07:13, 8 October 2023 by Ramya (talk | contribs) (Created page with "சி.ஆ. ராமசாமிப்பிள்ளை (1898-1968) தமிழ்க்கவிஞர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். == வாழ்க்கைக் குறிப்பு == சி.ஆ. ராமசாமிபிள்ளை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கரிவலம்வந்தநல்லூரி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சி.ஆ. ராமசாமிப்பிள்ளை (1898-1968) தமிழ்க்கவிஞர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சி.ஆ. ராமசாமிபிள்ளை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கரிவலம்வந்தநல்லூரில் பிறந்தார். பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை சேத்தூர் அரசவைக் கவிஞர் அப்பாவுக் கவிராயரிடம் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

கரிவலம்வந்தநல்லூர் கோயில் பால்வண்ணநாதர் மீது அந்தாதி, கலிவெண்பா, மாலை முதலிய பிரபந்த நூல்கள் பாடினார்.

மறைவு

சி.ஆ. ராமசாமிப்பிள்ளை 1968இல் காலமானார்.

பாடல் நடை

  • முகலிங்க வெண்பா அந்தாதி

கண்ணே கருத்தெ கதிகாணு மெய்தவத்தோர்
எண்ணே எழுத்தே யிறைவனே - நண்ணுந்
தவத்தால் உடல்வருந்தேன் சத்கருமஞ் செய்யேன்
அவத்தானே னுய்யு வதெவ் வாறு

நூல் பட்டியல்

  • திருக்கருவை முகலிங்க வெண்பா அந்தாதி
  • திருக்கருவை பால்வண்ணத்தந்தாதி
  • திருக்கருவை நீரோட்டக வெண்பா அந்தாதி
  • கருவை நாயகமாலை
  • திருக்கருவை வருக்கமாலை
  • திருக்கருவை இரட்டை மணிமாலை
  • திருக்கருவை பால்வண்ணப்பத்து
  • திருக்கருவை ஒப்பனையம்மன் வருகைப்பத்து
  • திருக்கருவை ஒப்பிலா வல்லியம்மன் பத்து
  • திருக்கருவை முப்பிடாதியம்மன் பத்து
  • திருக்கருவை வீரசண்முகர் வருக்கச் சமயமாலை
  • திருக்கருவை வீரசண்முகர் வாழ்த்துப் பாமாலை
  • திருக்கருவை தலபுராண போற்றிக் கலிவெண்பா

உசாத்துணை

  • அறியப்படாத அற்புதக் கவிஞர்: சி.ஆ. ராமசாமிப்பிள்ளை: தினமணி



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.