being created

கணியான் தோற்றக் கதை

From Tamil Wiki
Revision as of 16:43, 21 September 2023 by Navingssv (talk | contribs) (Created page with "கணியான் தோற்றக் கதை நாட்டார் வழக்காற்றில் உள்ள கதைப்பாடலகளுள் ஒன்று. கணியான் இனத்தவரின் தோற்றம் குறித்த வாய்மொழி கதைப்பாடல் இது. இது நாட்டார் கோவில் திருவிழாக்களில் பாடப்பட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கணியான் தோற்றக் கதை நாட்டார் வழக்காற்றில் உள்ள கதைப்பாடலகளுள் ஒன்று. கணியான் இனத்தவரின் தோற்றம் குறித்த வாய்மொழி கதைப்பாடல் இது. இது நாட்டார் கோவில் திருவிழாக்களில் பாடப்படுகிறது.

கதை

சுடலைமாடன் ஏடு கதை

சிவன் பார்வதியை பாதாள உலகத்திலிருந்து கவர்ந்து சென்ற பின் தட்சராஜன் உலகம் முழுவதையும் தன் கொடைக்கீழ் கொண்டுவர விரும்பினான். அதற்காக யாகம் ஒன்றை செய்தான். அதில் கிடைத்த அவிர்பாகத்தை சிவனுக்கு கொடுக்கக் கூடாது என முனிவர்களுக்கு கட்டளையிட்டான். இதனையறிந்து கோபமுற்ற சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து அதிலிருந்து வீரப்பத்திரனை பிறக்கச் செய்தார். உடன் பத்ரகாளியும் பிறந்தாள். சிவன் நெற்றிக் கண்ணை திறந்த உஷ்ணத்தால் பார்வதி உடல் வியர்த்த போது அதிலிருந்து பேய்ப்படைகள் தோன்றின. அனைவருமாக சென்று தட்சனின் யாகத்தை அழித்தனர். வீரபத்ரன் தட்சனின் தலையை வெட்டி கொய்தான்.

பார்வதி சிவனை பணிந்தது தன் தந்தைக்கு உயிர் கொடுக்கும் படி வேண்டினாள். சிவன் அருகிலிருந்த ஆட்டின் தலையை எடுத்து தட்சனின் தலையில் பொருத்தி அவரை உயிர் பெறச் செய்தார்.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.