being created

அர்ச். யாகப்பர் அம்மானை

From Tamil Wiki
Revision as of 23:33, 10 September 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added: Link Created:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அர்ச். யாகப்பர் அம்மானை

அர்ச்.யாகப்பர் அம்மானை (சந்தியாகு மாயோர் அம்மானை) (1647), இலங்கையில், போர்த்துகீசியர் காலத்தில் தோன்றிய நூல். இதனை இயற்றியவர் பேதுருப் புலவர். அர்ச். யாக்கபரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் இறை நிலை அடைந்ததையும், அவர் செய்த அற்புதங்களையும்ப் பற்றிக் கூறுகிறது, இந்த நூல்.

பிரசுரம், வெளியீடு

பேதுருப் புலவரால், பொ.யு. 1647-ல்,  இயற்றப்பட்ட நூல் அர்ச். யாகப்பர் அம்மானை.  சந்தியாகு மாயோர் அம்மானை என்ற வேறொரு பெயரும் இந்நூலுக்கு உண்டு. . இந்நூல், யாழ்ப்பாணம் அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலையிற் பிரசுரிக்கப்பட்டது. 1930-ல், இதன் மூன்றாம் பதிப்பு வெளியானது. இதன் திருத்தப்பட்ட பதிப்பு, ’சந்தியாகு மாயோர் அம்மானை’ என்ற பெயரில், 1991-ல், யாழ்ப்பாணம், புனித வளன் கத்தோலிக்க அச்சகத்தின் மூலம் வெளியானது. அ. யோண்பிள்ளை, இந்தத் திருத்திய பதிப்பைச் செப்பம் செய்து பதிப்பித்தார்.

ஆசிரியர் குறிப்பு

பேதுருப் புலவர், இலங்கையில், போர்த்துகீசியர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த முன்னோடித் தமிழ்ப் புலவர். முறையாகத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர். தெல்லிப்பழையில், சமயப் பணியாற்றி வந்த சுவாங் கறுவாலி சுவாமியின் வழிகாட்டுதலின்படியும்,  மதுரையிலிருந்து கிடைத்த அகவற்பாக்களின் துணை கொண்டும் அர்ச். யாகப்பர் அம்மானை நூலைப் படைத்தளித்தார். கிளாலி என்னும் கிராமத்தில் இருந்த புனித பெரிய யாகப்பர் ஆலயத்திற்கு வரும் தரும் பக்தர்கள் பயனடைவதற்காக அர்ச். யாகப்பர் அம்மானை நூல் இயற்றப்பட்டது.

நூலின் கதை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.