ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன்
From Tamil Wiki
ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன் (ஜெயலக்ஷ்மி ஸ்ரீனிவாசன்) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர்.
வாழ்க்கை
ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் திவான் ராமநாதனின் மகள் என்று சொல்லப்படுகிறது. இவர் எழுதிய புஷ்பஹாரம் என்னும் நாவல் மித்திரன் என்னும் இதழில் தொடராக வெளிவந்தது. புகழ்பெற்ற நாவல் இது.
நூல்கள்
- புஷ்பஹாரம் (நாவல்)
- லட்சுமி கடாட்சம் (சிறுகதைகள்)